Wednesday, October 27, 2010

ஓம் சிவோஹம் (நான் கடவுள் பாடல் வரிகள்)


ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
நமோ நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
தனமஷிவாய தஷிமதவாதச்சா….
அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
மூலப்ரமேயம் ஓம் ஓம்
அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
கன கன கன கன கன கன கன கன
ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
டம டம டம டம டுப டுப டுப டுப
சிவடபருத நாதவிஹரதி
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்
வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
சம்போ சம்போ ஷங்கரா
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
பஜே ஹம்

Tuesday, October 26, 2010

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..




ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று

ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று

கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று

மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று

ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!

Monday, October 25, 2010

~:அழகென்ற சொல்லுக்கு முருகா:~

~:அழகென்ற சொல்லுக்கு முருகா:~
(பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்)






முருகா.. முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா.. உந்தன் 
அருளன்றி உலகிலே பொருளேது முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா.. உந்தன் 

அருளன்றி உலகிலே பொருளேது முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா..

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா..
சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா..

கனிக்காக மனம் நொந்த முருகா..
கனிக்காக மனம் நொந்த முருகா.. முக்

கனியான தமிழ் தந்த செல்வமே முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

ஆண்டியாய் நின்ற வேல் முருகா.. உன்னை 

அண்டினோர் இன்பமே முருகா..

ஆண்டியாய் நின்ற வேல் முருகா.. உன்னை 

அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா..
ஆண்டியாய் நின்ற வேல் முருகா.. உன்னை 

அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா..

பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா.. ஞானப்

பழம் நீ உன்னை அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா.. உந்தன் 

அருளன்றி உலகிலே பொருளேது முருகா..
அழகென்ற சொல்லுக்கு முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

குன்றாறும் குடிகொண்ட முருகா.. பக்தர் 

குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா..
குன்றாறும் குடிகொண்ட முருகா.. பக்தர் 

குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா..

சக்தி உமை பாலனே முருகா..
சக்தி உமை பாலனே முருகா.. மனித 

சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா.. பரம்

பொருளுக்கு குருவான தேசிகா முருகா..
ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா.. பரம்

பொருளுக்கு குருவான தேசிகா முருகா..

அரகரா சண்முகா முருகா..
அரகரா சண்முகா முருகா.. என்று 

பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா..

அன்பிற்கு எல்லையோ முருகா.. உந்தன் 

அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா..
அன்பிற்கு எல்லையோ முருகா.. உந்தன் 

அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா..

கண்கண்ட தெய்வமே முருகா..
கண்கண்ட தெய்வமே முருகா.. எந்தன் 

கலியுக வரதனே அருள் தாரும் முருகா..

அழகென்ற சொல்லுக்கு முருகா.. உந்தன் 

அருளன்றி உலகிலே பொருளேது முருகா..
அழகென்ற சொல்லுக்கு முருகா..

முருகா.. முருகா.. முருகா..

Thursday, September 30, 2010

விநாயகர் அகவல் (ஔவை)



விநாயகர் அகவல் 
(ஔவை)


வினாயகர் அகவல் தோன்றிய கதை:- 

சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி கயிலாய் செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.

 இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த வினாயகர் பூசையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது வினாயகர் பெருமான் நேரில் தோன்றி “ அவ்வையே ! நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூசைகளைச் செய். அவர்களிற்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் ” என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூசைகளைச் செய்து வினாயகர் அகவலையும் பாடினார். வினாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரரிற்கும், சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார்.


வினாயகர் அகவல் வினாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன் யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது.



வினாயகர் அகவல் பொழிப்புரை:-

சீதக்களபச் செந்தாமரைப் பூம் 
  பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் 

  வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும் 

  வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும் 

  நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிறு புயமும் 

  மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் 

  திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்

குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால் உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்து செய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்ற மார்பும்

சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான 

  அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன 

  இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்தருளி 

  மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் 

  பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில் 

  திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி 

  கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே

சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 

  தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 

  இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து 

  இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி 

  மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் 

  ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறு ஆதாரத்து அங்குச நிலையும் 

  பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே

வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,

இடை பிங்கலையின் எழுத்தறிவித்து 

  கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 

  நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலணி அதனிற் கூடிய அசபை 

  விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை 

  காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 

  குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் 

  உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி,

சண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும் 

  எண்முகமாக இனிதெனக்கு அருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்கு 

  தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி 

  இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து 

  முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 

  தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன 

  அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி யென் செவியில் 

உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி
எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
  அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 

  சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய் 

  கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 

  கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 

  நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட 

  வித்தக வினாயக விரை கழல் சரணே! 

அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.


நன்றி: http://www.aanmegam.com/Vinayagar%20Agaval.htm

Friday, September 24, 2010

மெய்ப்பொருள் நாயனார்

மெய்பொருள் நாயனார்

“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்”
– திருத்தொண்டத்தொகை.

மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான்குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள்' எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.

இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத்துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார். 

அடியவர் வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான். மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான்.

 வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார். முத்தநாதன் நுழைந்த  பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். 

மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்து சென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.

Friday, September 3, 2010

இருத்ராட்சகம்

இருத்ராட்சகம்
(துளசிதாசர்)




நமா மீஷ மிஷான-நிர்வாண ரூபம்
விபும் வியாபகம் பிரம்ம-வேத-ஸ்வரூபம்
அஜம் நிர்குணம் நிர்விகல்பம் நிரீஹம்
சிதாகாஷா மாகாஷா-வாசம் பாஜே ஹம்

நிராகார மோங்கார-மூலம் துரீயம்
கிரா க்னான கோதீத மீஷம் கிரீஷம்
கராலம் மஹா-கால-காலம் க்ர்பாலம்
குணாகார சம்சார பாரம் நாடோ ஹம்.

துஷா ராத்ரி-சங்காஷா-கௌரம் கபீரம்
மனோபூத -கோடி பிரபா ஸ்ரீ சரீரம்
ச்ப்ஹுரன் மௌலி-கல்லோலினி-சாரு-கங்கா
லசத்-பால-பாலேந்து கந்தே புஜங்கா

சலட்குண்டலம் பிரு சுநேத்ரம் விசாலம்
பிரசன்னானனம் நில-கண்டம் தயாளம்
ம்ர்காதிச சார்மாம்பரம் முண்டமாலம்
ப்ரியம் ஷங்கரம் சர்வநாதம் பஜாமி.

பிரசண்டம் பிரக்ர்ஷ்டம் பிரகல்பம்  பரேஷம்
அகண்டம் அஜம் பானுகோடி-பிரகாசம்
திருயஹ்-ஷுல-நிர்முலனம் ஷுல-பாணிம்
பாஜே ஹம் பவானி-பதிம் பாவ-கம்யம்

காலாதீத-கல்யாண-கல்பாந்த-காரி
சதா சஜ்ஜனா-நந்த-தாதா புராரிஹ்
சிதானந்த-சண்டோஹா-மொஹாபஹாரி 
பிரசீத பிரசீத பிரப்ஹோ மன்மதாரிஹ்.

ந யாவத் உமாநாத-பாதாரவிந்தம்
பஜன்தீஹ லோகே பரேவா நராணாம்
ந யாவத்-சுகம் ஷாந்தி-சந்தாப-நாசம்
பிரசீத பிரப்ஹோ சர்வ பூதா-திவாசம்

ந ஜானாமி யோகம் ஜபம் நைவ பூஜாம்
நாடோ ஹம் சதா சர்வதா சம்பு துப்யம்
ஜரா ஜன்ம-துகௌக்ஹா தாதப்ய மானம்
பிரப்ஹோ பாஹி ஷாபான்-நமாமிஷா சம்போ.

ருட்ரட்சகம் இதம் ப்ரோக்டம் விப்ரென ஹரடோசயே
ஏ பதந்தி நர பக்த்ய தேசம் சம்பு பிரசிடத்தி

சம்போ சதா சிவா! 



Friday, August 6, 2010

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

திருவருட்பா 
(திருவருட்ப்ரகாச வள்ளலார்)





1)
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் 
  அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் 
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் 
  போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம் 
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம் 
  எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம் 
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் 
  சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். 

2)
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் 
  தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம் 
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம் 
  மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம் 
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம் 
  கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம் 
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம் 
  சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம். 


ஜெயஸ்ரீ said...இந்தப் பாடல்களுக்கு சுருக்கமாக விளக்கமளிக்க முயல்கிறேன்

1. இறைவனை ஜோதி(ஒளி) வடிவாகக் கண்ட வள்ளலார் "அருபெருஞ்சோதி" என்றே அழைத்தார்.
அந்த அருட்பெருஞ்சோதி தெய்வம் எனைத் தடுத்தாட்கொண்ட தெய்வம். பொன்னம்பலமாகிய சிதம்பரத்தே ஆனந்தக்கூத்தாடும் தெய்வம். நான்மறைகளும் போற்றும் தெய்வம். தத்துவஞானத்தையும், காரண காரியங்களையும் கடந்த தெய்வம். ( சைவ சித்தாந்தப்படி போதாந்த நிலை என்பது ஞானத்தயும்கடந்த நிலை. நாதாந்த நிலை என்பது காரிய காரணங்களைக் கடந்த நிலை. நாதாந்த நிலை அடைந்த ஒருவன் சிவலோகத்தைத் தன்னுள்ளே காண்கிறான்)
என் மன இருளகற்றி உள்ளொளி பெருக்கிய தெய்வம். நான் வேண்டியவற்றை வேண்டியவாறே எனக்கு அருளிய தெய்வம் . (அடிகளார் வேண்டியதுதான் என்ன - அவனருளன்றி வேறொன்றுமில்லை - அவனருளாலே அவன் தாள் வணங்கி). ஏன்னுடய எளியபாடல்களுக்கும் இரங்கி என்னையும் சிவமாக்கிய தெய்வம் (அடிகளார் பரசிவ நிலை எய்தி விட்டார். எனவே என்னையும் சிவமாக்கி - அ கம் ப்ரம்மாஸ்மி). பொன்னம்பலத்தே ஆனந்த நடமிடும் தெய்வம்.. 

2. தாயாய்த் தந்தையாய் எனைத்தாங்கும் தெய்வம் (அம்மையே அப்பா ஒப்பிலா மணியே). தனக்கு நிகர் இல்லாத தெய்வம்( தனக்குவமை இல்லாதான் ). தன்னை வாயாரத் துதிப்பவர் உள்ளக்கோயிலிலே வீற்றிருக்கும் தெய்வம். தன் திருவடிகளை என் தலையில் வைத்து எனக்கருள் மழை பொழிந்த தெய்வம்.கருணைக்கடலான தெய்வம்.பேரானந்தப் பெரு நிலையை எனக்கு முற்றும் காட்டிய தெய்வம். என்னை சேயாக்கி பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தூட்டும் தெய்வம்.. சிற்சபையில் நடமிடும் தெய்வம்

எனக்குத் தெரிந்தவரை விளக்கம் தந்திருக்கிறேன்.


நன்றி: http://podhuppaattu.blogspot.com/2006/02/10_06.html

Wednesday, July 28, 2010

~: கடவுள் வாழ்த்து :~






















தேனாய் தீம்பழமாய் சுவைசேர் கரும்பாய் அமுதந்
தானாய் அன்பருளே இனிக்கின்ற தனிப்பொருளே
வானாய்க் கால்அனலாய் புனலாய்அதில் வாழ்புவியாய்
ஆனாய் தந்தனையே அருள்ஆர் அமுதந் தனையே!


உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்களா
அளவி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்ன வர்க்கேசர ணாங்களே!





இயற்கையின் உயிராய் எங்கும்
    எழுந்தருள் இறையே போற்றி!
செயற்கையின் சிந்தைக் கெட்டாச்
    செல்வமே போற்றி போற்றி!
முயற்சியின் விளைவால் ஓங்கும்
    முதன்மையே போற்றி போற்றி!
பயிற்சியில் நிர்ப்போர்க் கென்றும்
    பண்புசெய் பரனே போற்றி!!


எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
    பரிதிமுன் பணியே போல
நண்ணிய நின்முன் னிங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்!!






















விண்ணுறு சுடரே என்னுள்
    விளங்கிய விளக்கே போற்றி!
கண்ணுறு மணியே என்னைக்
    கலந்தநற்க் களிப்பே போற்றி!
பண்ணுறு பயனே என்னைப்
    பணிவித்த மணியே போற்றி!
எண்ணறும் அடியார் தங்கட்க்
    கினியதெல் லமுதே போற்றி!!







நமசிவாய வாழ்க!!

விருப்பம் :)