Monday, April 23, 2012

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே : அப்பர்

திருநாவுக்கரசர் தேவாரம்



ஆறாம் திருமுறை 92 திருக்கழுக்குன்றம்

பாடல் எண் : 1
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
  முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
    ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
    புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பொழிப்புரை :
மூவிலை வேலாகிய சூலத்தைப் பிடித்த கையினனும், அழகிய கடவுளும், பிணமுதுகாட்டை உடையவனும், எல்லாவற்றிற்கும் அடியானவனும், தேவர்களுடைய அரசனும், ஆல கால விடத்தை மகிழ்ந்துண்ட தலைவனும், தாமரைமேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வணங்குதற்கு நெருங்க முடியாத பெருமானும், புனிதனும், எல்லாவற்றையும் காப்பவனும், கழுக்குன்றில் அமர்ந்தவனும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக்கண்டேன்.

பாடல் எண் : 2
பல்லாடு தலைசடைமே லுடையான் தன்னைப்
    பாய்புலித்தோ லுடையானைப் பகவன் தன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் தன்னைச்
    சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் தன்னை
    ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பொழிப்புரை :
பற்கள் வெளியே தோன்றுகின்ற வெண் தலையைச் சடைமேல் தரித்தவனும், பாயும் புலியை உரித்துக்கொண்ட தோலாகிய உடையினனும், சிறந்த ஆறு குணங்களை உடையவனும், சொற்களும் பொருள்கள் எல்லாமும் ஆனவனும், என்புஅணி நீங்கப்பெறாத தோற்றத்துடன் ஒளிவிட்டுத் திகழ்பவனும், முறை யல்லாத செயலை மேற்கொண்ட காலனை முன் ஒறுத்தவனும், ஆலின் கீழ் இருந்தவனும், அமுதமானவனும், கல்லாடை புனைந்தருளும் காபாலியும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக் கண்டேன். 

 நன்றி: தேவாரம்.ஆர்க்

Friday, April 20, 2012

சிவமயம் : பாட்டும் நானே பாவமும் நானே ..

பாடல்:
ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா

பாட்டும் நானே பாவமும் நானே...

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
(பாட்டும் நானே..)

அசையும்.. பொருளில்.. இசையும் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..


நான்.. அசைந்தால்.. அசையும்.. அகிலமெல்லாமே..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
(பாட்டும் நானே..)


படம்: திருவிளையாடல்
இசை: KV மகாதேவன்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்


காணொளி:

Friday, April 13, 2012

வள்ளிக் கணவன் பேரை, வழிப் போக்கர் சொன்னாலும்..: கிளிக் கண்ணி

முதற்க்கண் நன்றி:  முருகனருள்'வள்ளிக் கணவன் பேரை' இடுகை



பாடல் வரிகள்:
வள்ளிக் கணவன் பேரை,
வழிப் போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே,
ஊனும் உருகுதடி!


மாலை வடி வேலவர்க்கு, வரிசையாய் நானெழுதும்
ஓலைக் கிறுக்காச்சுதே - கிளியே, உள்ளமும் கிறுக்காச்சுதே!


காட்டுக் கொடி படர்ந்த, கருவூரின் காட்டுக்குள்ளே
விட்டுப் பிரிந்தானடி - கிளியே, வேலன் என்னும் பேரோனடி!

கூடிக் குலாவி மெத்த, குகனோடு வாழ்ந்த தெல்லாம்
வேடிக்கை அல்லவடி - கிளியே, வெகு நாளின் பந்தமடி!


மாடுமனை போனாலென்ன? மக்கள் சுற்றம் போனாலென்ன?
கோடிச் செம்பொன் போனாலென்ன? - கிளியே, குறுநகை போதுமடி!

எங்கும் நிறைந் திருப்போன்! "எட்டியும் எட்டா திருப்போன்"!
குங்கும வர்ணனடி - கிளியே, குமரப் பெருமானடி!




கண்ணி = இரண்டு இரண்டு வரிகளாகத் தொடுக்கப்படும் சின்னச் சின்ன பாட்டு! 
மிகவும் எளிமையாக கிராமிய மெட்டில் இருக்கும்! அதனாலேயே எனக்கும் ரொம்பப் பிடிக்கும்! பராபரக் கண்ணி கேள்விப்பட்டு இருப்பீங்களே? யார் எழுதியது சொல்லுங்க பார்ப்போம்!

இந்தப் பாடல் கிளிக் கண்ணி! கிளியை நோக்கி முருகனின் காதலி பாடுகிறாள்! 
எழுதியவர் பெயர் தெரியலை (அனானி)! ஆனால் அருமையா இருக்கு! 
கோடிச் செம்பொன் போனாலென்ன? - கிளியே, அவன் குறுநகை போதுமடி! கிளியே, அவன் குறுநகை போதுமடி!
பாடலைக் கேட்கும்போது நம் உள்ளம் குழைந்து ஊனும் உருகிவிடுகிறது..

அந்த இரண்டு வரியை, நடுவில் உடைத்து, நாலு வரியாக்கி, 
கண்ணியைக் காவடிச் சிந்து மெட்டில் பாடுறாங்க! கேட்டு கிட்டே படிங்க!
காவடிச் சிந்தின் குத்தாட்டத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி, கண்ணிப் பாட்டின் மெட்டிலே, இதோ காவடிச் சிந்து மெட்டு!

பாடல் காணொளி:- நித்ய ஸ்ரீ :

மீண்டும் நன்றியுடன்:  முருகனருள்'வள்ளிக் கணவன் பேரை' இடுகை

Thursday, April 12, 2012

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!



கல் தோன்றி மண் தோன்றா
காலத்து முன் தோன்றிய மூத்தவன்

உணவுக்கு உழவையும், உடைக்கு நெசவையும்,
உலகுக்கு நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவன்

கடல் கடந்து கடாரம் சென்று ஆட்சி செய்தவன்.
கற்களை கலை வண்ணமாக்க
கலைக்கு சங்கம் வைத்தவன்.


மனுநீதியை காத்த மானுடன்
மக்களுக்காக தன்னுயிர் தந்தவன்;
மக்களாட்சி முறையை முதன் முதலாக நடத்தியவன்.

அகிலத்தின் முதல் அணையைக் கட்டியவன;
அணுவைப் பிளக்க முடியும் என்றவன்;
மொழிக்கு முதல் இலக்கணத்தை வகுத்தவன்,

கையிலே வாளேந்தி, நெஞ்சிலே பயமிழந்து,
சுற்றி வந்த பகைவர் கூட்டத்தை கையேந்த வைத்து,
அகில உலகத்தையும் வியக்கச் செய்தவன்,

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைத்தவன்;
மார்பிலே புண்ணேந்தி தன்(இன)மானமே
பெரிதென மரணத்தை மிரட்டியவன்

மானமே பெரிதென, கற்பே உயிரென,
ஒழுக்கமே நெறியென ,
அன்பே கடவுளென வாழ்ந்தவன்

வந்தாரையெல்லாம் வாழவைத்தவன்
வாரி வாரி இறைத்தவன்,
முல்லைக்கும் தேர்தந்த இனமவன்

வாழ்க்கைமுறையை உலகுக்கு உணர்த்தியவன்.
உலகத்துக்கே வழிகாட்டியவன் நம் தமிழன்!


தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்
தமிழுக்கு மேலுமொரு புதிய சரித்திரத்தைப் படைப்போம்..!



தமிழனாய் வாழ்வோம்!
தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்!!

நன்றி: பூர்விகா பிரசுர விளம்பரம்.

விருப்பம் :)