Saturday, April 27, 2013

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 5 - (1101-1276)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai


ஓம் மாலுக்கோர் ஆழி ஈந்தாய் போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் மாலை எழுந்த மதியே போற்றி
ஓம் மாலைமகிழ்ந்து ஒருபால் வைத்தாய் போற்றி
ஓம் மாற்பேறாள்உமை மணாளா போற்றி
ஓம் மாற்றறி வரதா போற்றி போற்றி
ஓம் மானக் கயிலை மலையாய் போற்றி
ஓம் மான்தோல் உடையா மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மானேர் நோக்கி மணாளா போற்றி
ஓம் மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி 1110

ஓம் மின்னார் உருவ விகிர்தா போற்றி
ஓம் மின்னியலும் வார்சடையெம் பெருமா போற்றி
ஓம் மீயச் சூரிளங் கோயிலாய் போற்றி
ஓம் மீயச் சூருறை விண்ணவ போற்றி
ஓம் மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஓம் முக்கணன் என்னும் முனிவா போற்றி
ஓம் முக்கணா போற்றி முதல்வா போற்றி
ஓம் முடித்தாமரை அணிந்த மூர்த்தி போற்றி
ஓம் முடியடி தெரியா முதலே போற்றி
ஓம் முண்டீச் சரத்து முதல்வா போற்றி 1120

ஓம் முத்தமிழும் நான்மறையும் ஆனோய் போற்றி
ஓம் முத்தனைய முகிழ்முறுவல் உடையாய் போற்றி
ஓம் முத்தா போற்றி முதல்வா போற்றி
ஓம் முத்தியர் உவக்கும் உத்தம போற்றி
ஓம் முத்தியான முதலே போற்றி
ஓம் முத்தே போற்றி வித்தே போற்றி
ஓம் முதுகுன்றமர்ந்த முனிவா போற்றி
ஓம் முந்தோய் போற்றி முக்கணா போற்றி
ஓம் முப்புரம் எரித்தாய் போற்றி போற்றி
ஓம் முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி 1130

ஓம் முருகன் பூண்டி முதல்வா போற்றி
ஓம் முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
ஓம் முழவின் முழக்கில் முகிழ்ப்பாய் போற்றி
ஓம் முழுநீறு புனைந்த மூர்த்தீ போற்றி
ஓம் முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
ஓம் முழுவதும் இறந்த முதல்வா போற்றி
ஓம் முளையே போற்றி முத்தே போற்றி
ஓம் முறையே அருளும் முதல்வா போற்றி
ஓம் முன்பாகி நின்ற முதலே போற்றி
ஓம் முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி 1140

ஓம் முன்னியா நின்ற முதல்வா போற்றி
ஓம் மூக்கிச் சரத்து முதல்வா போற்றி
ஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வ போற்றி
ஓம் மூவர் இருவர் முதல்வா போற்றி
ஓம் மூவா நான்மறை முதல்வா போற்றி
ஓம் மூவா மேனி உடையாய் போற்றி
ஓம் மூவாத மேனி முக்கண்ணா போற்றி
ஓம் மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
ஓம் மூவுலகும் தாமாகி நின்றாய் போற்றி
ஓம் மூவேழ் சுற்றம் முரணுரு போற்றி 1150

ஓம் மெய்கிளரும் ஞான விளக்கே போற்றி
ஓம் மெய்சேரப் பால்வெண்ணீ றாடீ போற்றி
ஓம் மெய்ம்மையே ஞான விளக்கே போற்றி
ஓம் மெய்யடியார் உள்ளத்து வித்தே போற்றி
ஓம் மெய்யில் நின்ற ஐயா போற்றி
ஓம் மெய்யே நின்றெரியும் விளக்கே போற்றி
ஓம் மெய்வேள்வி மூர்த்திதலை யறுத்தாய் போற்றி
ஓம் மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
ஓம் மேல்வினை தீர்க்கும் முனிவ போற்றி
ஓம் மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி 1160

ஓம் மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஓம் மேலை வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் மேலை வினைகள் அறுப்போய் போற்றி
ஓம் மேலைக்காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
ஓம் மேலோர்கண் மேலார்கண் மேலாய் போற்றி
ஓம் மைசேர்ந்த கண்டம் உடையாய் போற்றி
ஓம் மொய்பவளக் கொடியனைய சடையாய் போற்றி
ஓம் யாரினும் இனியன் ஆனோய் போற்றி
ஓம் வக்கரை அமர்ந்த வரதா போற்றி 1170

ஓம் வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
ஓம் வச்சிரத்தம்ப நாதா போற்றி போற்றி
ஓம் வஞ்சம் கடிந்து வாழ்த்துவோய் போற்றி
ஓம் வஞ்சர்க்கும் அருளும் வள்ளால் போற்றி
ஓம் வடகரை மாந்துறை வள்ளால் போற்றி
ஓம் வடகுரங்காடு துறையாய் போற்றி
ஓம் வடதிரு முல்லை வாயிலாய் போற்றி
ஓம் வடுகூர் அடிகள் மாணடி போற்றி
ஓம் வந்தனைந்து ஏத்துவார் வரமே போற்றி
ஓம் வந்தென்றன் சிந்தை உவந்தாய் போற்றி 1180

ஓம் வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் வரமீந்து உதவும் வள்ளல் போற்றி
ஓம் வலஞ்சுழி மேவிய வரதா போற்றி
ஓம் வலம்புரம் மன்னிய வாழ்வே போற்றி
ஓம் வலிதா யம்உறை வள்ளால் போற்றி
ஓம் வலிவலம் வந்தருள் வரதா போற்றி
ஓம் வழித்துணை மருந்தே போற்றி போற்றி
ஓம் வளமார் அடியார் தம் உளமே போற்றி
ஓம் வள்ளலே போற்றி மணாளா போற்றி
ஓம் வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 1190

ஓம் வன்பார்த்தான் பனங்காட்டூரா போற்றி
ஓம் வன்மீக நாதா போற்றி போற்றி
ஓம் வன்னிமதி சென்னிமிசை வைத்தோய் போற்றி
ஓம் வன்னியூர் மேவிய மைந்தா போற்றி
ஓம் வாசுகிமா நாணாக வைத்தாய் போற்றி
ஓம் வாட்போக்கி மலையுறை வாழ்வே போற்றி
ஓம் வாய்மூரடிகள் இன் மலர்ப்பதம் போற்றி
ஓம் வாராச் செல்வம் வருவிப்பான் போற்றி
ஓம் வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
ஓம் வாழொளிபுத்தூர் வாழ்வே போற்றி 1200

ஓம் வான நாயகா போற்றி போற்றி...
ஓம் வான்அங்கத்தவர் தம் வளமே போற்றி
ஓம் வானகத் தமரர் தாயே போற்றி
ஓம் வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
ஓம் வான்மியூ ரமர்ந்த வாழ்வே போற்றி
ஓம் வானவர் உய்ய நஞ்சுண்டாய் போற்றி
ஓம் வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
ஓம் வானவர்கோன் தோள்துனித்த மைந்தா போற்றி
ஓம் வானாய் நிலனாய் நின்றாய் போற்றி 1210

ஓம் வானோர் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஓம் விசய மங்கை வேதியா போற்றி
ஓம் விடையாய் போற்றி வெண்ணீற்றாய் போற்றி
ஓம் விடையேறி வேண்டுலகத்து இருப்பாய் போற்றி
ஓம் விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
ஓம் விண்ணிழி வீழி மிழலையாய் போற்றி
ஓம் விண்ணும் மண்ணும் ஆனோய் போற்றி
ஓம் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனோய் போற்றி
ஓம் விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி 1220

ஓம் வித்தாய் அன்பு விதைப்பாய் போற்றி
ஓம் வியலூர் இருந்தருள் விமலா போற்றி
ஓம் விரிகடல் உலகின் விளைவே போற்றி
ஓம் விரிகதிரோன் சோற்றுத் துறையாய் போற்றி
ஓம் விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
ஓம் விரிசுடராய் விளங்கொளியாய் நின்றாய் போற்றி
ஓம் விருந்திட்ட வரதா போற்றி போற்றி
ஓம் விரைசேர் சரண வித்தகா போற்றி
ஓம் விழவின் ஒலியை விரும்புவாய் போற்றி
ஓம் விழவொலி வேள்வியொலி ஆனோய் போற்றி 1230

ஓம் விளமர் உகந்த வித்தகா போற்றி
ஓம் விற்குடி வீரட்டம் மேயாய் போற்றி
ஓம் விற்கோலத்துறை வீரா போற்றி
ஓம் வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
ஓம் வெஞ்சமாக் கூடல் விகிர்தா போற்றி
ஓம் வெஞ்சினவெள் ஏறூர்தி உடையாய் போற்றி
ஓம் வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
ஓம் வெண்காடுகந்த விகிர்தா போற்றி
ஓம் வெண்டலையிற் பலிகொண்ட விகிர்தா போற்றி
ஓம் வெண்டுறை மேவிய வேதா போற்றி 1240

ஓம் வெண்ணிவாழ் விமலநின் மெல்லடி போற்றி
ஓம் வெண்ணெய்நல்லூருறை மேலோய் போற்றி
ஓம் வெண்பாக்கத்துறை விமலா போற்றி
ஓம் வெண்மதியங் கண்ணி விரும்பினை போற்றி
ஓம் வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
ஓம் வெள்ளடையப்பா போற்றி போற்றி
ஓம் வெள்ளமொரு சடைமேல் ஏற்றோய் போற்றி
ஓம் வெள்ளி அம்பல ஆடலாய் போற்றி
ஓம் வெள்ளியம் பொருப்பின் விமலா போற்றி
ஓம் வெள்ளை நீற்றா போற்றி போற்றி 1250

ஓம் வெளியாய் இருப்பாய் போற்றி போற்றி
ஓம் வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
ஓம் வெற்றியின் விளைவே போற்றி போற்றி
ஓம் வெற்றியே நல்கும் வீரா போற்றி
ஓம் வென்றிவேல் வேடனை வீட்டினோய் போற்றி
ஓம் வேட்கள நன்நகர் மேயாய் போற்றி
ஓம் வேட்டக் குடியின் மேயோய் போற்றி
ஓம் வேண்டுதல் வெறுப்பு வேண்டாய் போற்றி
ஓம் வேண்டுவ யாவும் தருவாய் போற்றி
ஓம் வேண்டுவார் வேண்டுவதே ஈவாய் போற்றி 1260

ஓம் வேதங்கள் வேள்வி பயந்தாய் போற்றி
ஓம் வேதி குடியுறை விஜய போற்றி
ஓம் வேதி போற்றி விமலா போற்றி
ஓம் வேதியா உண்மைப் பொருளே போற்றி
ஓம் வேலவன் தாதாய் போற்றி போற்றி
ஓம் வேலைவிடம் உண்டமணி கண்டா போற்றி
ஓம் வேழத் துரிவையும் போர்த்தாய் போற்றி
ஓம் வேழத்தின் உருவிரும்பிப் போர்த்தாய் போற்றி
ஓம் வேள்விக்குடி வளர் வேதா போற்றி
ஓம் வேளாத வேள்வி உடையாய் போற்றி 1270

ஓம் வேளூர் மேவிய வித்தகா போற்றி
ஓம் வேற்காட்டு வேத வித்தகா போற்றி
ஓம் வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
ஓம் வைகல் மாடக் கோயிலாய் போற்றி
ஓம் வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
ஓம் வையகம் காக்கும் ஐயனே போற்றி 1276

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 4 - (901-1100)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai

ஓம் பழையாறை வடதளியாய் போற்றி
ஓம் பழையோய் போற்றி புதியோய் போற்றி
ஓம் பள்ளப் பரவை நஞ்சுண்டாய் போற்றி
ஓம் பள்ளிமுக் கூடற் பரனே போற்றி
ஓம் பற்றியுலகினை விடாதாய் போற்றி
ஓம் பற்றினார் பற்றினைப் பறிப்பாய் போற்றி
ஓம் பற்றை அறுக்கும் கொற்றவா போற்றி
ஓம் பனந்தாள் தாடகேச் சரணே போற்றி
ஓம் பனிமதி சூடுசெஞ் சடையோய் போற்றி
ஓம் பாகம் பெண்ணுரு ஆனோய் போற்றி 910

ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி
ஓம் பாங்கார் பழனத் தழகா போற்றி
ஓம் பாச்சிலாச் சிராமப் பரனே போற்றி
ஓம் பாசுபதம் பார்த்தற்கு அளித்தாய் போற்றி
ஓம் பாசூர் அமர்ந்த பசுபதீ போற்றி
ஓம் பாடகம் ஒலிப்ப ஆடுவாய் போற்றி
ஓம் பாட்டான நல்ல தொடையாய் போற்றி
ஓம் பாடலின் ஆடலின் பண்பா போற்றி
ஓம் பாடியாடும் பத்தர்க் கனியாய் போற்றி
ஓம் பாடுவார் நாவில் ஆடுவாய் போற்றி 920

ஓம் பாடுவார் பசியினைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி
ஓம் பாண்டவரிற் பார்த்தனுக்குப் பரிந்தாய் போற்றி
ஓம் பாண்டி மாதேவிக்கு அருளினோய் போற்றி
ஓம் பாண்டிக் கொடுமுடிப் பழையோய் போற்றி
ஓம் பாதாளீச்சரப் பரமா போற்றி
ஓம் பாதி மாது பரமா போற்றி
ஓம் பாதிரிப் புலியூர்ப் பரம போற்றி
ஓம் பாம்பும் மதியும் அணிந்தாய் போற்றி
ஓம் பாம்புர நன்நகர்ப் பரமனே போற்றி 930

ஓம் பார்க்கின்ற உயிரே போற்றி போற்றி
ஓம் பார்முழுதும் ஆய பரமா போற்றி
ஓம் பாராகிப் பௌவம் ஏழானாய் போற்றி
ஓம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
ஓம் பாரோடு விண்ணும் ஆனாய் போற்றி
ஓம் பாரோர் விண்ணேத்தப் படுவாய் போற்றி
ஓம் பால விருத்தணும் ஆனோய் போற்றி
ஓம் பால்வண்ணநாதா போற்றி போற்றி
ஓம் பாலாரும் மொழிமடவாள் பாகா போற்றி
ஓம் பாவிப்பார் பாசம் அறுப்பாய் போற்றி 940

ஓம் பிச்சாடல் பேயொடு உகந்தாய் போற்றி
ஓம் பிண்டத்தைக் காக்கும் பிரானாய் போற்றி
ஓம் பிணியுடைய அடியாரைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் பித்தா பிறைசூடி பெருமானே போற்றி
ஓம் பிரமற்குப் பிரானே போற்றி போற்றி
ஓம் பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
ஓம் பிழைப்பன பொறுக்கும் பெரியோய் போற்றி
ஓம் பிறப்பிடும்பை சாக்காடொன்று இல்லாய் போற்றி
ஓம் பிறர்க்கென்றும் காட்சிக்கு அரியாய் போற்றி
ஓம் பிறவாமை காக்கும் பெரும போற்றி 950

ஓம் பிறவி யறவி இலாதாய் போற்றி
ஓம் பிறவி யறுத்திடும் பிரானே போற்றி
ஓம் புகலூர் மேவிய புண்ணியா போற்றி
ஓம் புகலூர் வர்த்தமானீச்சரா போற்றி
ஓம் புகழப் பேரொளியாய் நின்றாய் போற்றி
ஓம் புகழேயல்லாது பழியிலான் போற்றி
ஓம் புடைசூழத் தேவர் குழாத்தாய் போற்றி
ஓம் புண்ணியப் பயனே போற்றி போற்றி
ஓம் புண்ணியம் புரியும் திண்ணியோய் போற்றி
ஓம் புண்ணியர் போற்றும் பொருளே போற்றி 960

ஓம் புண்ணியனே தெள்ளியனே போற்றி போற்றி
ஓம் புணர்ச்சிப் பொருளாகி நின்றாய் போற்றி
ஓம் புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
ஓம் புந்தியொன்றினோர்ப் பொருளே போற்றி
ஓம் புயங்கப் பெருமான் போற்றி போற்றி
ஓம் புரம்பல வெரித்த புராண போற்றி
ஓம் புராண காரண போற்றி போற்றி
ஓம் புலவர்க் கருளும் பெம்மான் போற்றி
ஓம் புலன்விளை வினைகள் போக்குவாய் போற்றி
ஓம் புலித்தோல் ஆடைக் குழகா போற்றி 970

ஓம் புலிமுலை புல்வாய்க்கு அருளினை போற்றி
ஓம் புறம்பயப் பதிவாழ் புண்ணியா போற்றி
ஓம் புறவார் பனங்காட்டூரா போற்றி
ஓம் புற்றின் அரவம் புனைந்தாய் போற்றி
ஓம் புனலைச் சடையில் புனைந்தோய் போற்றி
ஓம் புனிதனே இராம நாதனே போற்றி
ஓம் பூங்கொன்றைத் தாரொன் றணிந்தாய் போற்றி
ஓம் பூதகணம் புடைசூழ வருவாய் போற்றி
ஓம் பூதங்கள் ஆய புராண போற்றி
ஓம் பூதப் படையாள் புனிதா போற்றி 980

ஓம் பூதப் படையுடையாய் போற்றி போற்றி
ஓம் பூந்துருத்தி நெய்த்தானம் மேயாய் போற்றி
ஓம் பூமகள் நாயகா போற்றி போற்றி
ஓம் பூம்புகார்ச் சாய்க்காடு புகுந்தாய் போற்றி
ஓம் பூமலரான் ஏத்தும் புனிதா போற்றி
ஓம் பூரண முதலே சிவனே போற்றி
ஓம் பூவண நாதா போற்றி போற்றி
ஓம் பூவனூர்ப் புனிதநின் பொன்னடி போற்றி
ஓம் பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
ஓம் பூவில் மணமாய்ப் பிறப்பாய் போற்றி 990

ஓம் பூவின் நாயகா போற்றி போற்றி
ஓம் பெண்ணா கடத்துப் பெரும போற்றி
ஓம் பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
ஓம் பெண்மடந்தைத் தோளா போற்றி போற்றி
ஓம் பெயராதென் சிந்தை அமர்ந்தாய் போற்றி
ஓம் பெரியதோர் மலைவில்லா எய்தாய் போற்றி
ஓம் பெரியாய் போற்றி பிரானே போற்றி
ஓம் பெரியோய் போற்றி புனிதா போற்றி
ஓம் பெருகாமே வெள்ளந் தவிர்த்தாய் போற்றி
ஓம் பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி 1000

ஓம் பெருநெறி மேவும் அருளே போற்றி
ஓம் பெரும்புலியூர்ப்பெரு மானே போற்றி
ஓம் பெருமைக்குரிய இறைவா போற்றி
ஓம் பெருவினை இயற்றும் பெரும போற்றி
ஓம் பெருவேளூருறை பெரும போற்றி
ஓம் பெற்றம் ஊர்ந்த கொற்றவா போற்றி
ஓம் பேசுவார்க்கு எல்லாம் பெரியாய் போற்றி
ஓம் பேணு பெருந்துறைப் பெம்மான் போற்றி
ஓம் பேர்நந்தி யென்னும் பெயராய் போற்றி
ஓம் பேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 1010

ஓம் பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
ஓம் பேராதென் சிந்தையிருந்தாய் போற்றி
ஓம் பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
ஓம் பேரிலும் பெரியன் நீயே போற்றி
ஓம் பேரெயில் பெருமநின் பெய்கழல் போற்றி
ஓம் பைகிளரும் நாகம் அசைத்தாய் போற்றி
ஓம் பைஞ்ஞீலி அண்ணல்நின் பாதம் போற்றி
ஓம் பைய வினைகள் பறிப்பாய் போற்றி
ஓம் பையாடு அரவத் தணியாய் போற்றி
ஓம் பொங்கரவா அழகியனே போற்றி போற்றி 1020

ஓம் பொங்கும் ஞானம் புரிவாய் போற்றி
ஓம் பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
ஓம் பொய்சேர்ந்த சிந்தை போகாய் போற்றி
ஓம் பொய்ம்மொழிப் பொருளைப் பொடிப்பாய் போற்றி
ஓம் பொய்யா நஞ்சுண்ட பொறையே போற்றி
ஓம் பொய்யில்லாத மனத்தாய் போற்றி
ஓம் பொருந்தும் மானம் காப்பாய் போற்றி
ஓம் பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
ஓம் பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
ஓம் பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி 1030

ஓம் பொறிவாயில் ஐந்தவித்தான் போற்றி போற்றி
ஓம் பொறையுடைய பூமிநீர் ஆனோய் போற்றி
ஓம் பொன்னார் மேனி அண்ணா போற்றி
ஓம் பொன்னியல் கொன்றை பூண்பாய் போற்றி
ஓம் பொன்னியலும் திருமேனி <உடையாய் போற்றி
ஓம் பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
ஓம் பொன்னொத்த திருமேனிப் புனிதா போற்றி
ஓம் போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் போகாதென் நெஞ்சம் ஆள்வாய் போற்றி
ஓம் போற்றுவார் பாடல் புனைவாய் போற்றி 1040

ஓம் மஞ்சா போற்றி மணாளா போற்றி
ஓம் மடலவிழ் கொன்றை மாலையோய் போற்றி
ஓம் மணஞ்சேரி வார்சடை மணாளா போற்றி
ஓம் மண்ணாய் வளர்வாய் போற்றி போற்றி
ஓம் மண்ணிடை அடியார்க் காப்பாய் போற்றி
ஓம் மண்ணிப்படிக்கரை மணியே போற்றி
ஓம் மண்ணில் நிலவும் மன்னா போற்றி
ஓம் மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் மணியுடைய மாநாகம் ஆர்ப்பாய் போற்றி
ஓம் மணியொலி சங்கொலி அணிவாய் போற்றி 1050

ஓம் மதகரி உரித்தாய் போற்றி போற்றி
ஓம் மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
ஓம் மதுரனே போற்றி மணாளனே போற்றி
ஓம் மந்திர மாமலை மேயோய் போற்றி
ஓம் மந்திரத்தை மனத்துள்ளே வைத்தாய் போற்றி
ஓம் மந்திரம் தந்திரம் ஆனோய் போற்றி
ஓம் மயிலாடுந்துறை மணியே போற்றி
ஓம் மயிலைக் கபாலீச் சரத்தாய் போற்றி
ஓம் மயிலையம்பதி மணியே போற்றி
ஓம் மயேந்திரப் பள்ளி மன்னா போற்றி 1060

ஓம் மருகற் பெருமநின் மலரடி போற்றி
ஓம் மருவிய கருணை மலையே போற்றி
ஓம் மருவியே சிந்தை புகுந்தாய் போற்றி
ஓம் மலங்கெட அருளும் மன்னே போற்றி
ஓம் மலைநாடுடைய மன்னே போற்றி
ஓம் மலைமகள் கொழுந போற்றி போற்றி
ஓம் மலைமகள் மணாளா போற்றி போற்றி
ஓம் மலையாய் நிலைப்பாய் போற்றி போற்றி
ஓம் மலையான் மடந்தை மணவாளா போற்றி
ஓம் மலையான் மடந்தை மணாளா போற்றி 1070

ஓம் மழபாடி வயிரத் தூணே போற்றி
ஓம் மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
ஓம் மறவா மக்களை மதியாய் போற்றி
ஓம் மற்றெவர் மனத்தும் மகிழ்வாய் போற்றி
ஓம் மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
ஓம் மறியேந்து கையானே போற்றி போற்றி
ஓம் மறுதலை நோய்கள் அறுப்போய் போற்றி
ஓம் மறைக்கண் ணொளியாய் போற்றி போற்றி
ஓம் மறைக்காடுறையும் மணாளா போற்றி
ஓம் மறைதரும் பொருளே போற்றி போற்றி 1080

ஓம் மறையாய் ஒலிக்கும் மணியே போற்றி
ஓம் மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
ஓம் மறையோர் கோல நெறியே போற்றி
ஓம் மன்னா போற்றி மறைவலா போற்றி
ஓம் மன்னிய திருவருண் மலையே போற்றி
ஓம் மன்னிய மங்கை மணாளா போற்றி
ஓம் மன்னியசீர் மறைநான்கும் ஆனோய் போற்றி
ஓம் மன்னியென் சிந்தை இருந்தாய் போற்றி
ஓம் மன்னும் நிலையுடை மறையே போற்றி
ஓம் மன்னே போற்றி மாமணி போற்றி 1090

ஓம் மாகமடை மும்மதிலும் எய்தாய் போற்றி
ஓம் மாகறல் வாழும் மருந்தே போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி போற்றி
ஓம் மாட்சி பெரிதும் உடையாய் போற்றி
ஓம் மாணிக்க நாதா போற்றி போற்றி
ஓம் மால்கடலும் மால்விசும்பும் ஆனோய் போற்றி
ஓம் மால்செய்ராமேச வாழ்வே போற்றி
ஓம் மாலட்சுமி நாதா போற்றி போற்றி
ஓம் மால்யானை மத்தகத்தைக் கீண்டாய் போற்றி
ஓம் மால்வரை போற்றி மாதவ போற்றி 1100

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 3 - (601-900)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai

ஓம் சேய்ஞலூர் உறையுஞ் செல்வா போற்றி
ஓம் சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
ஓம் சேறைச் செந்நெறிச் செல்வா போற்றி
ஓம் சைவம் அருளிய தெய்வமே போற்றி
ஓம் சைவா போற்றி தலைவா போற்றி
ஓம் சொக்கனே போற்றி சிட்டனே போற்றி
ஓம் சொந்தமும் துணையும் ஆனோய் போற்றி
ஓம் சொந்தமென்று உரைப்பார் சுகமே போற்றி
ஓம் சொல்ல வொண்ணாச் சோதீ போற்றி
ஓம் சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றாய் போற்றி 610

ஓம் சொல்லில் தெறிக்கும் சுவையே போற்றி
ஓம் சொல்லுவார் சொற்களைச் சோதிப்பான் போற்றி
ஓம் சொல்லுவார் சொற்பொருள் ஆனாய் போற்றி
ஓம் சொற்கவி அனைத்தும் சூழ்ந்தாய் போற்றி
ஓம் சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
ஓம் சோதியே அழிவி லானே போற்றி
ஓம் சோபுர மேவிய சொக்கா போற்றி
ஓம் சோமனையும் செஞ்சடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் சோற்றுத் துறைவளர் தொல்லோய் போற்றி
ஓம் ஞாலத்தார் தொழும் நன்மையே போற்றி 620

ஓம் ஞாலமே நடத்தும் நாயகா போற்றி
ஓம் ஞானப் பெருங்கடற்கோர் நாத போற்றி
ஓம் ஞானப் பெருங்கடற்கோர் நாத போற்றி
ஓம் தக்கணா போற்றி தருமா போற்றி
ஓம் தகவுடையார் நெஞ்சிருக்கை கொண்டாய் போற்றி
ஓம் தஞ்சம் கொடுத்துத் தாங்குவாய் போற்றி
ஓம் தடுத்தாட் கொண்ட நாதா போற்றி
ஓம் தண்டலை நீணெறித் தாயே போற்றி
ஓம் தத்துவ ஞானத் தமிழே போற்றி
ஓம் தத்துவ ஞானத் தெளிவே போற்றி 630

ஓம் தத்துவனே போற்றி தாதாய் போற்றி
ஓம் தந்தை போற்றி தருமமே போற்றி
ஓம் தரும புரம்வளர் தாயே போற்றி
ஓம் தலைக்குத் தலைமாலை யணிந்தாய் போற்றி
ஓம் தலைச்சங் காடமர் தத்துவ போற்றி
ஓம் தலையாலங்கா டமர்ந்தாய் போற்றி
ஓம் தவத்தில் காட்டும் முகத்தாய் போற்றி
ஓம் தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
ஓம் தவம்புரி தவமே தலைவா போற்றி
ஓம் தன்னியல்பார் மற்றொருவர் இல்லாய் போற்றி 640

ஓம் தாங்கரிய சிவந்தானாய் நின்றாய் போற்றி
ஓம் தாமரையான் தலையைச் சாய்த்தாய் போற்றி
ஓம் தாயென இரங்கும் உளத்தோய் போற்றி
ஓம் தாவில் நாயகா போற்றி போற்றி
ஓம் தாளி யறுகின் தாராய் போற்றி
ஓம் தானவர் புரங்கள் எரித்தாய் போற்றி
ஓம் திங்கட் பாதிசேர் சடையோய் போற்றி
ஓம் திசைக்கெலாம் தேவாகி நின்றாய் போற்றி
ஓம் திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தாய் போற்றி
ஓம் திசையனைத்தும் நிறைந்த செல்வ போற்றி 650

ஓம் திசையனைத்தும் பிறவும் ஆனோய் போற்றி
ஓம் திரிபுரம் எரித்த சிவனே போற்றி
ஓம் திருஆமாத்தூர்த் தேவே போற்றி
ஓம் திருஇரும்பூளைத் தேவே போற்றி
ஓம் திருக்கழுக்குன்றிற் செல்வா போற்றி
ஓம் திருக்களர் மேவிய தேவே போற்றி
ஓம் திருக்காறாயில் தியாகா போற்றி
ஓம் திருக்கோடி காவுடைத் திருவே போற்றி
ஓம் திருத்தினை நகரச் சிவனே போற்றி
ஓம் திருத்துருத்தி கொண்ட தென்னவா போற்றி 660

ஓம் திருத்தெங்கூர் வளர் தேனே போற்றி
ஓம் திருத்தெளிச்சேரிச் சிவனே போற்றி
ஓம் திருநணா வளரும் திருவே போற்றி
ஓம் திருந்துதேவன்குடித் தேவா போற்றி
ஓம் திருப்பரங்குன்றிற் செல்வா போற்றி
ஓம் திருப்பருப்பதத்துத் தேவே போற்றி
ஓம் திருப்பனை யூர்வளர் தேவே போற்றி
ஓம் திருப்பாலைத்துறைச் செல்வா போற்றி
ஓம் திருப்பாற் றுறையுறை தேவே போற்றி
ஓம் திருப்புத்தூர்த்திருத் தளியாய் போற்றி 670

ஓம் திருப்புள்ள மங்கைத் திருவே போற்றி
ஓம் திருப்புன் கூரமர் திருவே போற்றி
ஓம் திருப்புனவாயிலெம் செல்வா போற்றி
ஓம் திருப்பூந்துருத்தித் தேசிக போற்றி
ஓம் திருமங்கலக்குடித் தேனே போற்றி
ஓம் திருமாணி குழிவளர் தேவே போற்றி
ஓம் திருமாலுக் காழி அளித்தாய் போற்றி
ஓம் திருமூலட் டானனே போற்றி போற்றி
ஓம் திருமேற்றளி நாயகா போற்றி போற்றி
ஓம் திருவல்லம் மேவிய தீவணா போற்றி 680

ஓம் திருவாகி நின்ற திறமே போற்றி
ஓம் திருவாஞ் சியம்வளர் தேவே போற்றி
ஓம் திருவிடை வாய்வளர் தேவா போற்றி
ஓம் திருவிளநகர் உறை திருவே போற்றி
ஓம் திருவீரட்டானச் செல்வா போற்றி
ஓம் திருவூறல்வளர் தேவே போற்றி
ஓம் திருவைகாஉறை சிவனே போற்றி
ஓம் திலதைப் பதிவாழ் திலகமே போற்றி
ஓம் தில்லைச் சிற்றம்பலம் மேயாய் போற்றி
ஓம் தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி 690

ஓம் துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
ஓம் துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
ஓம் துரியமும் இறந்த சுடரே போற்றி
ஓம் துரியா தீதமாய் நின்றாய் போற்றி
ஓம் துருத்தி ஈசநின் துணையடி போற்றி
ஓம் துறையூர் அமர்ந்த தூயோய் போற்றி
ஓம் துறையூர் நாதா போற்றி
ஓம் துன்பந்துடைக்கும் தூயனே போற்றி
ஓம் தூண்டு சுடரனைய சோதி போற்றி
ஓம் தூத்தூய திருமேனித் தோன்றல் போற்றி 700

ஓம் தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
ஓம் தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஓம் தூவெண் மதியைச் சூடினோய் போற்றி
ஓம் தெரியத் தேனாய் இனிப்பாய் போற்றி
ஓம் தெரிவரிதாகிய தெளிவே போற்றி
ஓம் தென்குடந்தை மேவும் தேவா போற்றி
ஓம் தென்குடித் திட்டைத் தேவே போற்றி
ஓம் தென்குரங்காடு துறையாய் போற்றி
ஓம் தென்திரு முல்லை வாயிலாய் போற்றி
ஓம் தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி 710

ஓம் தென்றிலை மன்றினுள் ஆடி போற்றி
ஓம் தென்னன் உவந்த மன்னனே போற்றி
ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி
ஓம் தேசப் பளிங்கின் திரளே போற்றி
ஓம் தேசம் பரவப் படுவாய் போற்றி
ஓம் தேம்புவார் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தேவாரத் தலப் போற்றி
ஓம் தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
ஓம் தேவி நாயகன் போற்றி போற்றி
ஓம் தேவூர் ஆதிநல் தேனே போற்றி 720

ஓம் தேனன் போற்றி தேவர்பிரான் போற்றி
ஓம் தேனே இன்னமுதே கோனே போற்றி
ஓம் தொடங்கிய வாழ்க்கையில் தொடர்வோய் போற்றி
ஓம் தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி
ஓம் தொண்டவர் உள்ளம் ஆண்டவா போற்றி
ஓம் தொத்ததார் இதழித் தொடையாய் போற்றி
ஓம் தொல்லமரர் சூளா மணியே போற்றி
ஓம் தொழில் நோக்கியாளுஞ் சுடரே போற்றி
ஓம் தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
ஓம் தொழுவார் மையல் துனிப்பாய் போற்றி 730

ஓம் தோடுடைச் செவியாய் போற்றி போற்றி
ஓம் தோணியும் ஏணியும் ஆனவன் போற்றி
ஓம் தோலிற் பொலிந்த உடையாய் போற்றி
ஓம் தோழா போற்றி துணைவா போற்றி
ஓம் தோளா முத்தச் சுடரே போற்றி
ஓம் தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் நகைப்பில் உலகம் துகைப்பாய் போற்றி
ஓம் நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
ஓம் நஞ்சுண்ட கண்டனே போற்றி போற்றி
ஓம் நஞ்சும் அருந்தும் நெஞ்சினோய் போற்றி 740

ஓம் நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
ஓம் நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
ஓம் நடநவிலுந் தொழிலின் நல்லோய் போற்றி
ஓம் நணுகுதல் அரிய நிலையே போற்றி
ஓம் நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
ஓம் நரகுறு துன்பம் அறுத்தனை போற்றி
ஓம் நலந்திகழும் கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் நல்லடியார் மனத்தூறும் நறவே போற்றி
ஓம் நல்லம் நடம்பயில் நாதா போற்றி
ஓம் நல்லவர் இதயம் ஆவாய் போற்றி 750

ஓம் நல்லவர் உள்ளம் நயப்பாய் போற்றி
ஓம் நல்லூர்ப் பெருமண நம்பா போற்றி
ஓம் நல்லூர்ப் பெருமநின் நற்பதம் போற்றி
ஓம் நல்லோய் போற்றி நன்மணி போற்றி
ஓம் நள்ளாறுடைய நாதா போற்றி
ஓம் நற்றவ நாதா போற்றி போற்றி
ஓம் நற்றவக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
ஓம் நற்றுணை அருளும் நாயகா போற்றி
ஓம் நற்றுணையப்பா போற்றி போற்றி 760

ஓம் நறையூர் சித்தீச் சரனே போற்றி
ஓம் நன்நிலத் துப்பெருங் கோயிலாய் போற்றி
ஓம் நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
ஓம் நன்றாக நடைபலவும் நவின்றாய் போற்றி
ஓம் நனிபள்ளி வளரும் நம்பா போற்றி
ஓம் நாகம் அசைத்த நம்பா போற்றி
ஓம் நாகேச்சரம்வாழ் நாதா போற்றி
ஓம் நாகைக்கா ரோணம் நயந்தாய் போற்றி
ஓம் நாடகம் நடத்தும் நாயகா போற்றி
ஓம் நாட்டகத்தே நடைபலவும் நவின்றாய் போற்றி 770

ஓம் நாட்டியத்தான்குடி நம்பீ போற்றி
ஓம் நாடிய நன்பொருள்கள் ஆனோய் போற்றி
ஓம் நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி
ஓம் நாமுறு குறைநீக்கும் நலமே போற்றி
ஓம் நாரையூர் நன்நகர் நலமே போற்றி
ஓம் நாலூர் மயான நாடகா போற்றி
ஓம் நாவல் ஈசுவரா போற்றி போற்றி
ஓம் நாவலூர் மேவிய நம்பா போற்றி
ஓம் நாவிற் சொல்லாய் மலர்வாய் போற்றி
ஓம் நாவின் துதிகொளும் நாயகா போற்றி 780

ஓம் நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
ஓம் நான்மறை ஆறங்கம் ஆனோய் போற்றி
ஓம் நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
ஓம் நான்முகன் போற்றி நாரணன் போற்றி
ஓம் நித்தா போற்றி நிமலா போற்றி
ஓம் நிலந்துக்க நீர்வளிதீ ஆனோய் போற்றி
ஓம் நிலைபெயர் வறியாத் தலைவா போற்றி
ஓம் நிலையாக நன்னெஞ்சில் நின்றாய் போற்றி
ஓம் நிலையாய் நின்ற தலைவா போற்றி
ஓம் நிழல்திகழ் மழுவாள் வைத்தாய் போற்றி 790

ஓம் நிழலாகி நீள்விசும்பும் ஆனோய் போற்றி
ஓம் நிறைபரஞ் சுடரே போற்றி போற்றி
ஓம் நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
ஓம் நின்றியூர் வளரும் நிதியே போற்றி
ஓம் நினைவார்க்குரிய துணைவா போற்றி
ஓம் நீங்காதென் உள்ளத் திருந்தாய் போற்றி
ஓம் நீங்காமே வெள்ளெலும்பு பூண்டாய் போற்றி
ஓம் நீடுர் நிருத்தநின் நீளடி போற்றி
ஓம் நீராகி நெடுவரைகள் ஆனோய் போற்றி
ஓம் நீரார் நியமம் உடையாய் போற்றி 800

ஓம் நீராவி யான நிழலே போற்றி
ஓம் நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
ஓம் நீரும் நெருப்பும் ஆனாய் போற்றி
ஓம் நீலக் குடியுறை நிருத்தா போற்றி
ஓம் நீலகண்டா போற்றி போற்றி
ஓம் நீலம் பொலிந்த மிடற்றாய் போற்றி
ஓம் நீள அகலம் உடையாய் போற்றி
ஓம் நீள்வரையின் உச்சி யிருப்பாய் போற்றி
ஓம் நீளொளி ஆகிய நிருத்தா போற்றி
ஓம் நீற்றினையும் நெற்றிமேல் இட்டாய் போற்றி 810

ஓம் நீறார் மேனி நிமலா போற்றி
ஓம் நீறேறு தோளெட்டு உடையாய் போற்றி
ஓம் நீறேறு நீல மிடற்றாய் போற்றி
ஓம் நுண்ணறி வாளர் கண்ணே போற்றி
ஓம் நுதற்கண் கனலாய் போற்றி போற்றி
ஓம் நெஞ்சக விளக்கே வள்ளால் போற்றி
ஓம் நெஞ்சத் தாமரை நிலைப்பாய் போற்றி
ஓம் நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
ஓம் நெடுங்களம் இனிதமர் நிமலா போற்றி
ஓம் நெய்த்தானத்து நெய் ஆடியே போற்றி 820

ஓம் நெய்யார் திரிசூலம் கையாய் போற்றி
ஓம் நெல்லிக் காஉறை நித்திய போற்றி
ஓம் நெல்வாயில் அரத்துறையாய் போற்றி
ஓம் நெல்வாயில் வளர் நிதியே போற்றி
ஓம் நெல்வெண்ணெய் மேவிய நிருத்தா போற்றி
ஓம் நெல்வேலியுறை செல்வா போற்றி
ஓம் நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகா போற்றி போற்றி
ஓம் நெறியாய்க் கலந்த நினைவே போற்றி
ஓம் நெறியே போற்றி நினைவே போற்றி 830

ஓம் நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
ஓம் நொந்தா ஒண்சுடரே எந்தாய் போற்றி
ஓம் பகலாகி வானாகி நின்றாய் போற்றி
ஓம் பகலுங் கங்குலும் ஆனோய் போற்றி
ஓம் பகலும் இரவும் ஆனாய் போற்றி
ஓம் பகையறப் புனலும் சுமந்தாய் போற்றி
ஓம் பசுவேறிப் பலிதிரியும் பண்பா போற்றி
ஓம் பஞ்சேர் அடியாள் பங்கா போற்றி
ஓம் பட்டீச்சரமுறை பரமா போற்றி
ஓம் படர்செஞ் சடையாய் விமலா போற்றி 840

ஓம் படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
ஓம் படிக்காசு வைத்த பரமா போற்றி
ஓம் படிதனிற் காசிப் பதியோய் போற்றி
ஓம் படியுறப் பயின்ற பரனே போற்றி
ஓம் படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
ஓம் படையாப் பல்பூதம் உடையாய் போற்றி
ஓம் பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
ஓம் பண்டும் இன்றும் நின்றாய் போற்றி
ஓம் பண்டே எம்மை ஆண்டாய் போற்றி
ஓம் பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி 850

ஓம் பண்ணார் இசையாய் நின்றாய் போற்றி
ஓம் பண்ணிசையாகி நிற்பாய் போற்றி
ஓம் பண்ணிடைத் தமிழை ஒப்பாய் போற்றி
ஓம் பண்ணியல் மாலை நண்ணுவாய் போற்றி
ஓம் பண்ணில் நிலவும் பாடலே போற்றி
ஓம் பண்ணிற் பாட்டு ஆனாய் போற்றி
ஓம் பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
ஓம் பண்ணொடு வீணையாழ் பயின்றாய் போற்றி
ஓம் பண்மேல் பாவித்து இருந்தாய் போற்றி
ஓம் பணிசெய உவக்கும் பதியே போற்றி 860

ஓம் பத்தர் சித்தம் பரவினாய் போற்றி
ஓம் பத்தர்களுக்கு இன்பம் பயந்தாய் போற்றி
ஓம் பத்தா போற்றி பவனே போற்றி
ஓம் பத்தி நெறியினைப் படைத்தாய் போற்றி
ஓம் பத்திமைப் பாடல் நத்துவாய் போற்றி
ஓம் பத்தியில் விளைவாய் போற்றிபோற்றி
ஓம் பத்துப் பல்லூழிப் பரந்தாய் போற்றி
ஓம் பதிற்று ஒருநாலும் இல்லாய் போற்றி
ஓம் பந்தணை நல்லூர்ப் பசுபதீ போற்றி
ஓம் பயற்றூ ருறையும் பண்பா போற்றி 870

ஓம் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஓம் பரங்கிரி நாதா போற்றி போற்றி
ஓம் பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
ஓம் பரமா போற்றி பாசுபதா போற்றி
ஓம் பரவுவார் பிணைகளைக் களைவாய் போற்றி
ஓம் பரவையுண் மண்தளிப் பரனே போற்றி
ஓம் பராபர முதலே போற்றி போற்றி
ஓம் பராபரா போற்றி பாசூரா போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி
ஓம் பராய்த்துறை மேவிய பரனே போற்றி 880

ஓம் பரிசை யறியாமை நின்றாய் போற்றி
ஓம் பரிதி நியமப் பரனே போற்றி
ஓம் பரிந்தெனை ஆண்டாய் போற்றி போற்றி
ஓம் பரியதோர் பாம்பரைமேல் ஆர்த்தாய் போற்றி
ஓம் பரியல் வீரட்டப் பரமா போற்றி
ஓம் பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
ஓம் பல்பல வண்ணத் தரசே போற்றி
ஓம் பல்லடியார் பணிக்குப் பரிவாய் போற்றி
ஓம் பல்லவனீச்சரப் பரனே போற்றி
ஓம் பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி 890

ஓம் பல்லுயிரிக் கெல்லாம் பதியோய் போற்றி
ஓம் பல்லூழி அனைத்தும் படைத்தாய் போற்றி
ஓம் பவளத் தடவரை போல்வாய் போற்றி
ஓம் பழத்தினிற் சுவையே ஒப்பாய் போற்றி
ஓம் பழமலை நாதா போற்றி போற்றி
ஓம் பழன நகரெம் பிரானே போற்றி
ஓம் பழன நகரெம் பிரானே போற்றி
ஓம் பழிதுடைத்து ஆளும் பரனே போற்றி
ஓம் பழுவூர் மேவிய பண்பா போற்றி
ஓம் பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி 900

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 2 - (301-600)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai

ஓம் ஏனத் திளமருப்புப் பூண்டாய் போற்றி
ஓம் ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
ஓம் ஐயா போற்றி அணுவே போற்றி
ஓம் ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஓம் ஐயாறு நின்ற ஐயா போற்றி
ஓம் ஒட்டகத்து ஊணா உகந்தாய் போற்றி
ஓம் ஒத்த உணர்வினை உவந்தாய் போற்றி
ஓம் ஒப்பள வில்லா உருவோய் போற்றி
ஓம் ஒப்பினை யில்லா உருவே போற்றி
ஓம் ஒருகாலத் தொன்றாகி நின்றாய் போற்றி 310

ஓம் ஒருசுடராய் உலகேழும் ஆனோய் போற்றி
ஓம் ஒருதலை மகனாய் உயர்ந்தோய் போற்றி
ஓம் ஒருமை பெண்மை உடையாய் போற்றி
ஓம் ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
ஓம் ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
ஓம் ஒளிகொள் தேவ தேவனே போற்றி
ஓம் ஒளியாய் நிறைவாய் போற்றி போற்றி
ஓம் ஒற்றி யூருடை ஒருவ போற்றி
ஓம் ஒற்றியூர் உடைய கொற்றவா போற்றி
ஓம் ஒற்றை வெள்ளேறு உடையாய் போற்றி 320

ஓம் ஒன்றாய் அனைத்துமாய் நின்றாய் போற்றி
ஓம் ஓங்காரத் துருவாகி நின்றாய் போற்றி
ஓம் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றாய் போற்றி
ஓம் ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
ஓம் ஓங்குசிற்றேமத்து ஒருவா போற்றி
ஓம் ஓணகாந்தன் தளியாய் போற்றி
ஓம் ஓணகாந்தீசுவரா போற்றி போற்றி
ஓம் ஓத்தூர் மேவிய ஒளியே போற்றி
ஓம் ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
ஓம் ஓமாம் புலியூர் ஒருவனே போற்றி 330

ஓம் ஓராதார் உள்ளத்தில் நில்லாய் போற்றி
ஓம் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தாய் போற்றி
ஓம் ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஓம் கங்கைச் சடையீர் போற்றி போற்றி
ஓம் கச்சிஅநேகதங்காவதா போற்றி
ஓம் கச்சிநெறிக் காரைக் காடா போற்றி
ஓம் கச்சிமேற்றளியுறை கடலே போற்றி
ஓம் கச்சூ ராலக் கோயிலாய் போற்றி
ஓம் கஞ்சனூர் ஆண்டகற் பகமே போற்றி
ஓம் கட்டியே போற்றி கதியே போற்றி 340

ஓம் கடம்பந் துறைவளர் கடலே போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
ஓம் கடல்நஞ்சம் உண்டிருண்ட கண்ட போற்றி
ஓம் கடலாய்ப் பரக்கும் முதலே போற்றி
ஓம் கடலும் வரையும் ஆனாய் போற்றி
ஓம் கடவூர் மயானக் கடவுளே போற்றி
ஓம் கடவூர்க்கால வீரட்டா போற்றி
ஓம் கடிக்குளத் துறைகடல் அமுதே போற்றி
ஓம் கடித்தாமரை ஏய்ந்த கண்ணாய் போற்றி 350

ஓம் கடுவாய்க் கரைப்புத் தூரா போற்றி
ஓம் கடுவிருட்சுடரை ஒப்பாய் போற்றி
ஓம் கடைமுடிப் பரமநின் கழல்கள் போற்றி
ஓம் கடையேன் அடிமை கண்டாய் போற்றி
ஓம் கண்டவர் சிந்தை கவர்ந்தாய் போற்றி
ஓம் கண்டவர் நெஞ்சம் கவர்வாய் போற்றி
ஓம் கண்டிவீ ரட்டக் கரும்பே போற்றி
ஓம் கண்ணப்பர்க் சிவந்தானாய் நின்றாய் போற்றி
ஓம் கண்ணார் அமுதக் கடலே போற்றி
ஓம் கண்ணார் அமுதே போற்றி போற்றி 360

ஓம் கண்ணார் கோயில்வாழ் கனியே போற்றி
ஓம் கண்ணிடை மணியை ஒப்பாய் போற்றி
ஓம் கண்ணிற் கருமணி ஆவோய் போற்றி
ஓம் கண்ணின்மேற் கண்ணொன்று உடையாய் போற்றி
ஓம் கண்ணினுள் மணியே கொழுந்தே போற்றி
ஓம் கண்ணு மூன்றுடையீர் போற்றி போற்றி
ஓம் கதியே போற்றி கனியே போற்றி
ஓம் கமலாலயனுக்கு அருள்வோய் போற்றி
ஓம் கயல்விழி பாகம் கொண்டாய் போற்றி
ஓம் கயாசூரனை அவனாற் கொன்றாய் போற்றி 370

ஓம் கயிலாயம் இடமாக் கொண்டாய் போற்றி
ஓம் கயிலை மலையாய் போற்றி போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் கயிலை மலையானே போற்றி போற்றி
ஓம் கரங்கூப்ப நேரும் காட்சியாய் போற்றி
ஓம் கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
ஓம் கரவீ ரச்சங் கரனே போற்றி
ஓம் கருக்குடி அண்ணல்நின் கழல்கள் போற்றி
ஓம் கருகாவூருறை கடம்பா போற்றி
ஓம் கருணைக் கடலே ஐயா போற்றி 380

ஓம் கருத்துடைய பூதப்படையாய் போற்றி
ஓம் கருதி வந்தோர்க்கு உறுதியே போற்றி
ஓம் கருதுவார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
ஓம் கருப்பறியல்நகர் காப்பாய் போற்றி
ஓம் கருமுகி லாகிய கண்ணே போற்றி
ஓம் கருவிலி அமருங் கண்ணே போற்றி
ஓம் கருவூர் ஆனிலைக் கண்மணி போற்றி
ஓம் கல்லலகு பாணி பயின்றாய் போற்றி
ஓம் கலிக்காமூர் வளர் கண்ணே போற்றி
ஓம் கலைக்கெலாம் பொருளே போற்றி போற்றி 390

ஓம் கலைகள் அனைத்தும் கடந்தாய் போற்றி
ஓம் கலைபயில் அழகா போற்றி போற்றி
ஓம் கலைய நல்லூர்க் கடவுளே போற்றி
ஓம் கலையார் அரிகே சரியாய் போற்றி
ஓம் கவலைப் பிறப்பும் காப்பாய் போற்றி
ஓம் கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
ஓம் கழிப்பாலை உறை கரும்பே போற்றி
ஓம் கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
ஓம் கள்ள மனத்தைக் கடந்தாய் போற்றி
ஓம் கள்ளங் கடிந்தென்னை ஆண்டாய் போற்றி 400

ஓம் கள்ளி முதுகாட்டில் ஆடி போற்றி
ஓம் கள்ளில் மேய கனியே போற்றி
ஓம் கற்குடி மாமலைக் கண்ணுதல் போற்றி
ஓம் கற்றவர் உண்ணுங் கனியே போற்றி
ஓம் கற்றவர் உள்ளம் உற்றாய் போற்றி
ஓம் கற்றவர் விரும்புங் கனியே போற்றி
ஓம் கற்றோர்களுக்கோர் அமுதே போற்றி
ஓம் கறைமணி மிடற்றோய் கடலே போற்றி
ஓம் கறையுடைய கண்டம் உடையாய் போற்றி
ஓம் கனலாய் எரியும் சிவனே போற்றி 410

ஓம் கனலைக் கண்ணில் உடையோய் போற்றி
ஓம் கனவிலுந் தேவர்க்கு அரியாய் போற்றி
ஓம் கன்றாப்பூர் நடுதறியே போற்றி
ஓம் கன்றிய காலனைக் காய்ந்தோய் போற்றி
ஓம் கன்னல் போற்றி கரும்பு போற்றி
ஓம் கன்னார் உரித்த கனியே போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் உடையாய் போற்றி
ஓம் காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
ஓம் காடிடங் கொண்ட கடவுளே போற்றி
ஓம் காடுடைப் பொடியைப் பூசினோய் போற்றி 420

ஓம் காண்டற்கு அரியவொரு கடவுள் போற்றி
ஓம் காதலிப்பார் தங்கட்கு எளியாய் போற்றி
ஓம் காதிற் குழையும் பெய்தாய் போற்றி
ஓம் காமரங்கள் பாடித் திரிவாய் போற்றி
ஓம் காமனையும் கரியாகக் காய்ந்தாய் போற்றி
ஓம் கார்க்குன்ற மழையே போற்றி போற்றி
ஓம் காரணங் காட்டும் கனியே போற்றி
ஓம் கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி
ஓம் காரியம் நடத்தும் கடவுளே போற்றி
ஓம் கால கண்டனே போற்றி போற்றி 430

ஓம் கால காலனாய் நின்றாய் போற்றி
ஓம் காலனைக் காய்ந்து நட்டாய் போற்றி
ஓம் காலை முளைத்த கதிரே போற்றி
ஓம் காவ தேசுவரா போற்றி போற்றி
ஓம் காவின் தென்றலே ஆவாய் போற்றி
ஓம் காழியுள் மேய கடலே போற்றி
ஓம் காளத்தி நாதநின் கழலிணை போற்றி
ஓம் காளத்தி நாதா போற்றி போற்றி
ஓம் காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
ஓம் காற்றாய்த் திரியும் அரனே போற்றி 440

ஓம் காற்றினும் கடிதாக நடந்தாய் போற்றி
ஓம் காற்றும் வெளியும் ஆனாய் போற்றி
ஓம் கானக் கல்லாற் கீழ் நிழலாய் போற்றி
ஓம் கானப்பேருறை காளாய் போற்றி
ஓம் கானாட்டு முள்ளூர்க் கடவுளே போற்றி
ஓம் கானூர் மேயசெங் கரும்பே போற்றி
ஓம் கிடைத்தற்கு அரிய பொருளே போற்றி
ஓம் கீழ்க்கோட்டத்தெங் கூத்தா போற்றி
ஓம் கீழ்த்திருக் காட்டுப் பள்ளியாய் போற்றி
ஓம் கீழ்வேளூரான் கேடிலீ போற்றி 450

ஓம் குடந்தைக் காரோ ணத்தாய் போற்றி
ஓம் குடமூக் கமர்கும் பேசா போற்றி
ஓம் குடமூக்கில் இடமாகிக் கொண்டாய் போற்றி
ஓம் குடவாயில் மன்னிய குருவே போற்றி
ஓம் குண்டரொடு பிரித்தென்னை ஆண்டாய் போற்றி
ஓம் குமரனையும் மகனாக உடையாய் போற்றி
ஓம் குரக்குக்காவிற் குருவே போற்றி
ஓம் குரங்கணில் முட்டங் குலவினாய் போற்றி
ஓம் குரவங் கமழும் குற்றால போற்றி
ஓம் குருகாவூருறை குணமே போற்றி 460

ஓம் குருவி தனக்கும் அருளினை போற்றி
ஓம் குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
ஓம் குலச்சிறை ஏத்துங்குன்றே போற்றி
ஓம் குவைப்பதி மலிந்த கோவே போற்றி
ஓம் குழகா போற்றி குணக்கடலே போற்றி
ஓம் குழவிப் பிறைசடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் குழிதண்டலையாய் போற்றி போற்றி
ஓம் குழைத்தசொன் மாலை கொள்வோய் போற்றி
ஓம் குளத்தூர் அமர்ந்த கோவே போற்றி
ஓம் குளிர்டவீழி மிழலையமர் குழகா போற்றி 470

ஓம் குற்ற மறுத்தார் குணமே போற்றி
ஓம் குற்றம் பொறுத்த ஈசுவரா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் குற்றாலத் தெங்கூத்தா போற்றி
ஓம் குறிக்கோள் ஆகும் குழகா போற்றி
ஓம் குறியாம் இசையில் குளிர்ந்தாய் போற்றி
ஓம் குறியே போற்றி குணமே போற்றி
ஓம் குறுக்கை வீரட்டக் குழகா போற்றி
ஓம் குனிராரூர் கோயிலாக் கொண்டாய் போற்றி
ஓம் கூடல் இலங்கு குருமணி போற்றி 480

ஓம் கூடலம் பதியுறை கோவே போற்றி
ஓம் கூடலையாற்றூர்க் கோவே போற்றி
ஓம் கூடற் கோயில் கொண்டாய் போற்றி
ஓம் கூத்தாட வல்ல குழக போற்றி
ஓம் கூம்பித் தொழுவார் குறிப்பே போற்றி
ஓம் கூற்றினையும் குரைகழலால் உதைத்தாய் போற்றி
ஓம் கூற்றுவன் பிணியாக் கொற்றவா போற்றி
ஓம் கூறேறா மங்கை மழுவா போற்றி
ஓம் கேடின்று உயர்ந்த சுடரே போற்றி
ஓம் கேதாரக்கிரிக் கிழவோய் போற்றி 490

ஓம் கைச்சின மேவிய கண்ணுதல் போற்றி
ஓம் கையறு தும்பம் களைவோய் போற்றி
ஓம் கையார் மழுவெம் படையாய் போற்றி
ஓம் கைவேழ முகத்தவனைப் படைத்தாய் போற்றி
ஓம் கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
ஓம் கொட்டையூரிற்கோ டீச்சரா போற்றி
ஓம் கொடிமாடச் செங்குன்றாய் போற்றி
ஓம் கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
ஓம் கொடுங்குன்றமருங் கோவே போற்றி
ஓம் கொடுவினை தீர்க்கும் கோவே போற்றி 500

ஓம் கொண்டீச் சரத்துக் கோவே போற்றி
ஓம் கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
ஓம் கொய்மலரங் கொன்றைச் சடையாய் போற்றி
ஓம் கொல்புலித் தோலாடைக் குழக போற்றி
ஓம் கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
ஓம் கொல்லுங் கூற்றினை <உதைத்தாய் போற்றி
ஓம் கொள்ளம் பூதூர்க் கோவே போற்றி
ஓம் கொள்ளிக் காடமர் கொற்றவ போற்றி
ஓம் கொள்ளுங் கிழமை ஏழானாய் போற்றி
ஓம் கோகழி மேவிய கோவே போற்றி 510

ஓம் கோட்டாற மருங்குழகா போற்றி
ஓம் கோட்டூர் மேவிய கொழுந்தே போற்றி
ஓம் கோடிக் கோயிற் குழகா போற்றி
ஓம் கோடிக்காவுடைக் கோவே போற்றி
ஓம் கோடியாய் போற்றி குழக போற்றி
ஓம் கோணமாமலைமடி கொண்டாய் போற்றி
ஓம் கோதிலார் மனத்தே மேவுவாய் போற்றி
ஓம் கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
ஓம் கோயிற் குடிகொளும் கொற்றவா போற்றி
ஓம் கோல நீறணி கோமான் போற்றி 520

ஓம் கோலக் கோகர்ணக் கொழுந்தே போற்றி
ஓம் கோலக்காவிற் கோவே போற்றி
ஓம் கோலங்கள் மேன்மேல் உகப்பாய் போற்றி
ஓம் கோலம் பலவும் உகப்பாய் போற்றி
ஓம் கோலானை அழலால் காய்ந்தாய் போற்றி
ஓம் கோவல்வீரட்டக் கோமான் போற்றி
ஓம் கோழம் பத்துறை கோவே போற்றி
ஓம் கோளிலி உறையுங் கோவே போற்றி
ஓம் கோளிலி நாதா போற்றி போற்றி
ஓம் சக்கரப்பள்ளி எம் சங்கரா போற்றி 530

ஓம் சங்கரனே தத்துவனே போற்றி போற்றி
ஓம் சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
ஓம் சடையாய் போற்றி சங்கரா போற்றி
ஓம் சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஓம் சத்தாகிய சிற்குணனே போற்றி
ஓம் சத்திமுத்தச் சதுரா போற்றி
ஓம் சத்தியும் சிவமும் ஆனோய் போற்றி
ஓம் சதாசிவனே நன்மையனே போற்றி போற்றி
ஓம் சதுரனே போற்றி சாமியே போற்றி
ஓம் சதுரா சதுரக் குழையாய் போற்றி 540

ஓம் சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
ஓம் சராசரமாகி நின்றாய் போற்றி
ஓம் சாத்த மங்கைச் சம்புவே போற்றி
ஓம் சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி
ஓம் சாம்பர் மெய்பசுந் தலைவா போற்றி
ஓம் சாய்க்காடினிதுறை சதுரா போற்றி
ஓம் சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
ஓம் சிக்கல் நகர்வளர் செல்வா போற்றி
ஓம் சிக்கெனப் பிடிப்போர் சிந்தையோய் போற்றி
ஓம் சிட்டன் போற்றி சேகரன் போற்றி 550

ஓம் சித்தம் தெளிய வைத்தாய் போற்றி
ஓம் சித்தனே போற்றி அத்தனே போற்றி
ஓம் சிந்தனைக் கரிய சிவமே போற்றி
ஓம் சிந்திப்பார் நெல்லிக் கனியே போற்றி
ஓம் சிந்தியா தவர்க்கும் சொந்தமே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஓம் சிராமலை மேவிய சிவனே போற்றி
ஓம் சிரித்துப் பகை வெல்லும் சிவனே போற்றி
ஓம் சிலந்திக் கருள்முனம் செய்தான் போற்றி 560

ஓம் சிலந்திக்கருள் முன்னம் செய்தாய் போற்றி
ஓம் சில்லைச் சிரைத்தலை ஊணா போற்றி
ஓம் சிறவே போற்றி சிவமே போற்றி
ஓம் சிறியார் பெரியார் துணையே போற்றி
ஓம் சிறுகுடிப் பிறைமுடிச் செல்வா போற்றி
ஓம் சிறுமை நோக்கிச் சினந்தாய் போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் சீரார் திருவை யாறா போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி
ஓம் சீரால் வணங்கப் படுவாய் போற்றி 570

ஓம் சுடர்த்திங்கட் கண்ணி உடையாய் போற்றி
ஓம் சுடர்வாய் அரவுடைச் சோதி போற்றி
ஓம் சுடரில் திகழ்கின்ற சோதி போற்றி
ஓம் சுடரொளிப் பிழம்பே போற்றி போற்றி
ஓம் சுந்தரத்த பொடிதனைத் துதைந்தாய் போற்றி
ஓம் சுருதிப் பொருளே அத்தா போற்றி
ஓம் சுவைத்தலை மேவிய கண்ணே போற்றி
ஓம் சுழியல் வளருந் துணைவா போற்றி
ஓம் சூட்டான திங்கள் முடியாய் போற்றி
ஓம் சூலப் படையுடையாய் போற்றி போற்றி 580

ஓம் சூழ்ச்சி சிறிதும் இல்லாய் போற்றி
ஓம் செங்காட்டங்குடிச் சேவகா போற்றி
ஓம் செந்தமிழுள்ளும் சிறந்தாய் போற்றி
ஓம் செந்தழற் கொழுந்தே செய்யனே போற்றி
ஓம் செம்பொன் பள்ளிச் செல்வா போற்றி
ஓம் செம்மொழி அருளும் சிவனே போற்றி
ஓம் செய்ய நெறியில் செலுத்துவாய் போற்றி
ஓம் செய்ய மேனியின் அழகா போற்றி
ஓம் செய்யனே போற்றி ஐயனே போற்றி
ஓம் செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி 590

ஓம் செயலை முற்றச் செய்குவாய் போற்றி
ஓம் செய்வினைகள் நல்வினைகள் ஆனோய் போற்றி
ஓம் செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தாய் போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் செல்லாச் செல்வம் உடையாய் போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
ஓம் செற்றவர் சினத்தை எற்றுவாய் போற்றி
ஓம் சென்றடைந்தார் தீவினை தீர்ப்பாய் போற்றி
ஓம் சென்னியில் வைத்த சேவக போற்றி 600

திருச்சிற்றம்பலம்

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)

சிவபெருமான் போற்றிகள் 1276 - பகுதி 1 - (1-300)



முதற்கண் நன்றி: https://www.facebook.com/thirumarai

ஓம் அகத்தியன் பள்ளி அமர்ந்தாய் போற்றி
ஓம் அகத்தியான் பள்ளி ஐயா போற்றி
ஓம் அகப்பேய் அகந்தை அழிப்பாய் போற்றி
ஓம் அகரம் முதலின் எழுத்தானாய் போற்றி
ஓம் அகில உலக நாதனே போற்றி
ஓம் அங்கங்கே சிவமாகி நின்றாய் போற்றி
ஓம் அங்கணனே அமரர்தம் இறைவா போற்றி
ஓம் அங்கயர் கண்ணியோ டமர்ந்தாய் போற்றி
ஓம் அங்கொன்று அறியாமை நின்றாய் போற்றி
ஓம் அச்சிறு பாக்கம் அமர்ந்தாய் போற்றி 10

ஓம் அஞ்சினார் உருக அணைப்பாய் போற்றி
ஓம் அஞ்சேல் என்றிங்கு அருள்வோய் போற்றி
ஓம் அஞ்சைக் களத்தப்பா போற்றி போற்றி
ஓம் அஞ்சைக் களத்துறை அப்பா போற்றி
ஓம் அடங்கலும் வேட்கையை அறுப்போய் போற்றி
ஓம் அட்ட மூர்த்தியே போற்றி போற்றி
ஓம் அடித்தாமரை மலர்மேல் வைத்தாய் போற்றி
ஓம் அடியவர்க்கு அருளும் அண்ணலே போற்றி
ஓம் அடியார் அடிமை அறிவாய் போற்றி
ஓம் அடியார்க்கு அமுதெலாம் ஈவாய் போற்றி 20

ஓம் அடியார்க்கு ஆரமுதம் ஆனோய் போற்றி
ஓம் அடியார்க்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி
ஓம் அடியும் முடியும் இல்லாய் போற்றி
ஓம் அடியேமை ஆளுடைய அடிகள் போற்றி
ஓம் அடியொடு நடுவீறு ஆனோய் போற்றி
ஓம் அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றி
ஓம் அடைவே புனல்சூழ் ஐயாற்றாய் போற்றி
ஓம் அண்டம தாய ஆதியே போற்றி
ஓம் அண்டமேழ் அன்று கடந்தாய் போற்றி
ஓம் அண்டவர் காணா அரனே போற்றி 30

ஓம் அண்ணல்கே தீச்சரத்து அடிகள் போற்றி
ஓம் அண்ணாமலை எம் அண்ணா போற்றி
ஓம் அண்ணாமலை மேல் அணிமலை போற்றி
ஓம் அண்ணாலே போற்றி அங்கணா போற்றி
ஓம் அணிகிளர் கூடல் அமர்ந்தோய் போற்றி
ஓம் அணிநீல கண்டம் உடையாய் போற்றி
ஓம் அணியாரூர்த் திருமூலட்டானனே போற்றி
ஓம் அணுவாகி ஆதியாய் நின்றாய் போற்றி
ஓம் அத்தனே அகில அரசனே போற்றி
ஓம் அத்தனே இசையிற் பித்தனே போற்றி 40

ஓம் அத்தனொடும் அம்மையெனக்கு ஆனோய் போற்றி
ஓம் அத்தா போற்றி அரனே போற்றி
ஓம் அத்திக் கருளிய அரசே போற்றி
ஓம் அதிகைவீரட்டத் தழகா போற்றி
ஓம் அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் அந்திவாய் வண்ணத்து அழக போற்றி
ஓம் அநேகதங் காவதம் அமர்ந்தாய் போற்றி
ஓம் அப்பனும் அம்மையும் ஆனோய் போற்றி
ஓம் அம்பர்க் பெருந்திருக் கோயிலாய் போற்றி
ஓம் அம்பர்மாகாளத் தரனே போற்றி 50

ஓம் அம்மை பயக்கும் அமிர்தே போற்றி
ஓம் அமரர் பெருமான் போற்றி போற்றி
ஓம் அமிழ்த கலைநாதா போற்றி போற்றி
ஓம் அமுதே போற்றி தேனே போற்றி
ஓம் அமையாவரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஓம் அயன்மாலும் காணாத அரனே போற்றி
ஓம் அரக்கனையும் ஆற்றல் அழித்தாய் போற்றி
ஓம் அரசால் மதுரை அமர்ந்தாய் போற்றி
ஓம் அரசிலி நாதா ஐயா போற்றி
ஓம் அரத்துறை நாதா போற்றி போற்றி 60

ஓம் அரதைப் பெரும்பதி அமர்ந்தாய் போற்றி
ஓம் அரவம் அரையில் அசைத்தாய் போற்றி
ஓம் அரிசிற்கரைப்புத் தூரா போற்றி
ஓம் அரியயற்கு எட்டா நிருத்தா போற்றி
ஓம் அரியன வெல்லாம் அருள்வாய் போற்றி
ஓம் அரியாய் போற்றி அமலா போற்றி
ஓம் அரியாய் போற்றி எளியாய் போற்றி
ஓம் அருகாக வந்தென்னை ஆள்வோய் போற்றி
ஓம் அருகி மிளிரும் பொன்னே போற்றி
ஓம் அருட்பா உரைப்பார்க்கு அன்பா போற்றி 70

ஓம் அருட்பெருங்கடலே அமலா போற்றி
ஓம் அருநெறி அருளும் அண்ணல் போற்றி
ஓம் அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
ஓம் அரும்பே போற்றி அலகே போற்றி
ஓம் அருமலரோன் சிரமறுத்தாய் போற்றி போற்றி
ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி போற்றி
ஓம் அருமையான ஐயா போற்றி
ஓம் அருமையில் எளிய அழகே போற்றி
ஓம் அருவமும் உருவமும் ஆனோய் போற்றி
ஓம் அருவினை அனைத்தும் அறுப்பாய் போற்றி 80

ஓம் அருளா போற்றி அழகா போற்றி
ஓம் அருளிடத் தோன்றும் அம்மான் போற்றி
ஓம் அரைசே போற்றி அமுதே போற்றி
ஓம் அல்லல் அறுக்கும் நல்லாய் போற்றி
ஓம் அல்லல் களைந்தே ஆள்வாய் போற்றி
ஓம் அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
ஓம் அலைகடன் மீமிசை நடந்தோய் போற்றி
ஓம் அவத்தை அகற்றும் அண்ணல் போற்றி
ஓம் அவளிவள் நல்லூர் அரசே போற்றி
ஓம் அவிநாசிவ்வளர் அரனே போற்றி 90

ஓம் அழகா போற்றி ஆரூரா போற்றி
ஓம் அழகிய வரதா போற்றி போற்றி
ஓம் அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி
ஓம் அழிவிலா ஆனந்த வாரி போற்றி
ஓம் அழுந்தூர் ஆளும் அரசே போற்றி
ஓம் அளவில் பெருமை உடையாய் போற்றி
ஓம் அளிபவர் உள்ளத் தமுதே போற்றி
ஓம் அளியின் நீடு நிதியம் போற்றி
ஓம் அற்றவர்க்கு ஆரதமும் ஆனோய் போற்றி
ஓம் அற்றவர்க்கு அற்ற அரனே போற்றி 100

ஓம் அறிவாய் போற்றி அறிவிப்பாய் போற்றி
ஓம் அறிவை அறியும் பொருளே போற்றி
ஓம் அறையணி நல்லூர் அரசே போற்றி
ஓம் அன்பர் படியும் கடலே போற்றி
ஓம் அன்பாகி நின்றார்க்கு அணியாய் போற்றி
ஓம் அன்பிலா லந்துறை அரசே போற்றி
ஓம் அன்பிற்கு இணங்கும் ஐயனே போற்றி
ஓம் அனலாடி யங்கை மறித்தாய் போற்றி
ஓம் அனலுருவா அன்புருவா போற்றி போற்றி
ஓம் அன்னியூர் வளர் அரனே போற்றி 110

ஓம் ஆக்கும் அழிவும் உடையாய் போற்றி
ஓம் ஆக்கூர் அமர்ந்த அம்மான் போற்றி
ஓம் ஆக்கூரில் தோன்றிய அப்பனே போற்றி
ஓம் ஆகாய வண்ணம் உடையாய் போற்றி
ஓம் ஆடக மதுரை அரசே போற்றி
ஓம் ஆடக மதுரை அரசே போற்றி
ஓம் ஆட்சி உலகை உடையாய் போற்றி
ஓம் ஆட்டான அஞ்சும் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆடல் அரங்காய் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆடல்மால் யானை உரித்தாய் போற்றி 120

ஓம் ஆடானையுறை ஆதீ போற்றி
ஓம் ஆண்டுலகேழ் அத்தனையும் வைத்தாய் போற்றி
ஓம் ஆணும் பெண்ணும் ஆனாய் போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
ஓம் ஆதி போற்றி அறிவே போற்றி
ஓம் ஆதியா நின்ற அருளே போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனோய் போற்றி
ஓம் ஆப்பனூர் வளர் ஐயா போற்றி
ஓம் ஆப்பா டிப்பதி அமலா போற்றி 130

ஓம் ஆய்ந்து மலர்தூவ நின்றாய் போற்றி
ஓம் ஆரா அமுதம் ஆனாய் போற்றி
ஓம் ஆரா அமுதா அருளே போற்றி
ஓம் ஆரா அன்பின் கனியே போற்றி
ஓம் ஆரியன் போற்றி தமிழன் போற்றி
ஓம் ஆரும் இகழப் படாதாய் போற்றி
ஓம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
ஓம் ஆரூர் அரநெறி அப்பா போற்றி
ஓம் ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி 140

ஓம் ஆல நீழலில் அமர்ந்தாய் போற்றி
ஓம் ஆலங்காட்டெம் அடிகள் போற்றி
ஓம் ஆலம் பொழிலுறை அரனே போற்றி
ஓம் ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
ஓம் ஆலவாய் அப்பா போற்றி போற்றி
ஓம் ஆலவாய் அமர்ந்த அண்ணலே போற்றி
ஓம் ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தாய் போற்றி
ஓம் ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
ஓம் ஆவடு தண்துறை அமரா போற்றி
ஓம் ஆவா வென்றெனக்கு அருளாய் போற்றி 150

ஓம் ஆவூர்ப்பசுபதீச் சரனே போற்றி
ஓம் ஆழாமே அருளும் அரசே போற்றி
ஓம் ஆழிகள் அனைத்தும் அணிந்தாய் போற்றி
ஓம் ஆளான வர்கட்கு அன்பா போற்றி
ஓம் ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தாய் போற்றி
ஓம் ஆறேறு சென்னி உடையாய் போற்றி
ஓம் ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
ஓம் ஆனைக் காவுறை ஆதீ போற்றி
ஓம் இசையின் பயனே போற்றி போற்றி
ஓம் இடரைக் களையும் எந்தாய் போற்றி 160

ஓம் இடுபலி கொண்டுணி என்போய் போற்றி
ஓம் இடும்பா வனத்துறும் இறைவா போற்றி
ஓம் இடைச்சுரம் இருந்த எழில்வண போற்றி
ஓம் இடைமரு துறையும் எந்தாய் போற்றி
ஓம் இடைமரு துறையும் எந்தாய் போற்றி
ஓம் இடைமருது மேவிய ஈச போற்றி
ஓம் இடையாற்று நாதா போற்றி போற்றி
ஓம் இடையாறிடையமர் ஈசா போற்றி
ஓம் இந்திரத்தை இனிதாக ஈந்தாய் போற்றி
ஓம் இந்திரநீல மலையாய் போற்றி 170

ஓம் இம்மை பயக்கும் இறைவ போற்றி
ஓம் இமையவர்கள் ஏத்த இருந்தாய் போற்றி
ஓம் இமையாது உயிராது இருந்தாய் போற்றி
ஓம் இமையோர் நாயகா இறைவா போற்றி
ஓம் இரத்தின மலைநாதா போற்றி போற்றி
ஓம் இரவும் பகலுமாய் நின்றாய் போற்றி
ஓம் இராமல் எங்கும் இருப்போய் போற்றி
ஓம் இராமன தீச்சரத் திறைவா போற்றி
ஓம் இருநான்கு மூர்த்திகளும் ஆனோய் போற்றி
ஓம் இரும்புலன் புலர இசைந்தனை போற்றி 180

ஓம் இரும்பைமா காளத் திறைவா போற்றி
ஓம் இருவினை தீர்ந்திடும் என்போய் போற்றி
ஓம் இருள்கெட அருளும் இறைவா போற்றி
ஓம் இருளாய் ஒளியாய் நின்றாய் போற்றி
ஓம் இலங்கு சுடரெம் ஈசா போற்றி
ஓம் இலங்கெரி யெடுத்தே ஆடுவாய் போற்றி
ஓம் இலம்பையங் கோட்ரூர் ஈசா போற்றி
ஓம் இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஓம் இழைக்கும் எழுத்துக்கு <உயிரே போற்றி
ஓம் இளைஞா யிற்றின் சோதியே போற்றி 190

ஓம் இறையாய் எங்கும் இருப்பாய் போற்றி
ஓம் இன்றெனக்கு ஆரமுது ஆனோய் போற்றி
ஓம் இன்னடியார்க் கின்பம் விளைப்பாய் போற்றி
ஓம் இன்னதென் றறிகிலா இறையே போற்றி
ஓம் இன்னம்பர் ஈசநின் இணையடி போற்றி
ஓம் இன்னமுது ஆனோய் போற்றி போற்றி
ஓம் இன்னமுது போற்றி இணையிலீ போற்றி
ஓம் இன்னல் அழிப்பாய் போற்றி போற்றி
ஓம் இன்னிசை மாலை ஏந்துவாய் போற்றி
ஓம் ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி 200

ஓம் ஈங்கோய்மலை எம் எந்தாய் போற்றி
ஓம் ஈச போற்றி இறைவா போற்றி
ஓம் ஈறிலா முதலே போற்றி போற்றி
ஓம் உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
ஓம் உசாத்தா னத்தமர் <உறவே போற்றி
ஓம் உடலாய் உயிராய் உள்ளாய் போற்றி
ஓம் உடலின் வினைகள் அறுப்பாய் போற்றி
ஓம் உடையாய் போற்றி உணர்வே போற்றி
ஓம் உடையாய் போற்றி உத்தமா போற்றி
ஓம் உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி 210

ஓம் உண்ணி லாவிய உணர்வே போற்றி
ஓம் உணர்தற்கு அரியாய் போற்றி போற்றி
ஓம் உணரப் படாததொன் றில்லாய் போற்றி
ஓம் உமைபங்குடையீர் போற்றி போற்றி
ஓம் உமையாளை அகத்து அணைத்தாய் போற்றி
ஓம் உமையோர் கூறுடை உருவா போற்றி
ஓம் உய்யும் வண்ணம் உணர்த்துவாய் போற்றி
ஓம் உயிர்க்குயிராய் வருகின்ற உயர்வே போற்றி
ஓம் உரியன வெல்லாம் உவந்தாய் போற்றி
ஓம் உருக்கண் மணியாய் போற்றி போற்றி 220

ஓம் உருகாதார் உள்ளத்து நில்லாய் போற்றி
ஓம் உருகி நினைவார்க்கு உருகுவாய் போற்றி
ஓம் உருகுவார் உள்ளத்து இறங்குவாய் போற்றி
ஓம் உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
ஓம் உருவே அருவே சின்மயமே போற்றி
ஓம் உரைக்கண் கடந்தாய் போற்றி போற்றி
ஓம் உரையுணர் விறந்த ஒருவ போற்றி
ஓம் உலகம் எல்லாம் உடையாய் போற்றி
ஓம் உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
ஓம் உலகை நடுங்காமற் காப்பாய் போற்றி 230

ஓம் உலர்ந்தார் தம் அங்கம் அணிந்தாய் போற்றி
ஓம் உவகையோடு இன்னருள் செய்தாய் போற்றி
ஓம் உவப்பில் மலரும் உளமே போற்றி
ஓம் உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி
ஓம் உளத்துள் சிறக்கும் உறவே போற்றி
ஓம் உள்ளத்து உவகை தருவாய் போற்றி
ஓம் உள்ளம் ஆர்ந்த உருவே போற்றி
ஓம் உள்ளம் கவர்ந்த வள்ளலே போற்றி
ஓம் உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
ஓம் உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி 240

ஓம் உள்ளும் அன்பர் மனத்தாய் போற்றி
ஓம் உறவே போற்றி உயிரே போற்றி
ஓம் உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பாய் போற்றி
ஓம் உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
ஓம் ஊராகி நின்ற உலகே போற்றி
ஓம் ஊராரும் மூவுலகத் துள்ளாய் போற்றி
ஓம் ஊழி ஏழான ஒருவா போற்றி
ஓம் ஊழி பலகண்டிருந்தாய் போற்றி
ஓம் ஊழித் தீயன்ன வொளியாய் போற்றி
ஓம் ஊழியின் முடிவிலும் உள்ளாய் போற்றி 250

ஓம் ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓம் ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓம் ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
ஓம் ஊனே போற்றி உயிரே போற்றி
ஓம் எங்கும் உறைந்தருள் இறைவா போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி போற்றி
ஓம் எண்ணரும் ஞானத் தின்பமே போற்றி
ஓம் எண்ணாயிர நூறு பெயராய் போற்றி
ஓம் எண்ணும் எழுத்தும் ஆனோய் போற்றி
ஓம் எண்மேலும் எண்ணம் உடையாய் போற்றி 260

ஓம் எத்தனையும் பத்திசெய்வார்க்கு இனியாய் போற்றி
ஓம் எத்திசை யுள்ளும் இருப்பாய் போற்றி
ஓம் எதிர்கொள்பாடி எம் இறைவா போற்றி
ஓம் எதிரா உலகம் அமைப்பாய் போற்றி
ஓம் எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
ஓம் எந்தாய் போற்றி இறைவா போற்றி
ஓம் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் எப்பொருட்கும் பொதுவானான் போற்றி போற்றி
ஓம் எப்பொழுதும் எம்மனம் இருப்போய் போற்றி
ஓம் எப்பொழுதும் என்னுள்ளத் துள்ளாய் போற்றி 270

ஓம் எம்மிறை யானே ஏந்தலே போற்றி
ஓம் எரிசுடர் ஆன இறைவா போற்றி
ஓம் எரியுங் கனலாய் மதியாய் போற்றி
ஓம் எருக்கத்தம்புலியூர் எந்தாய் போற்றி
ஓம் எல்லாஞ் சிவனென நின்றாய் போற்றி
ஓம் எல்லாப் பொருளும் இயக்குவாய் போற்றி
ஓம் எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஓம் எழுத்தக்குயிர் போன்றாய் போற்றி போற்றி
ஓம் எறும்பியூர் இருந்த எம்மான் போற்றி
ஓம் என்றும் அருளே செய்வாய் போற்றி 280

ஓம் என்றும் இருந்தாய் போற்றி போற்றி
ஓம் என்னெஞ்சே யுன்னில் இனியா போற்றி
ஓம் என்னையும் ஒருவனாக்கி யிருங்கழற் போற்றி
ஓம் ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
ஓம் ஏகம்பத்து உறையும் எந்தாய் போற்றி
ஓம் ஏகனே அம்பிகா பதியே போற்றி
ஓம் ஏடகத்தெந்தை நின் இணையடி போற்றி
ஓம் ஏய்ந்த வுமைநங்கை பங்க போற்றி
ஓம் ஏரி நிறைந்தனைய செல்வ போற்றி
ஓம் ஏலக் குழலி பாக போற்றி 290

ஓம் ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனோய் போற்றி
ஓம் ஏழ்நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி
ஓம் ஏழிசை ஆனோய் போற்றி போற்றி
ஓம் ஏழூழிக்கு அப்புறம் நின்றாய் போற்றி
ஓம் ஏறரிய ஏறுங் குணத்தாய் போற்றி
ஓம் ஏற்றன இயற்றும் எந்தாய் போற்றி
ஓம் ஏற்றிசை வான்மேல் இருந்தாய் போற்றி
ஓம் ஏற்றுயர் கொடியாய் போற்றி போற்றி
ஓம் ஏறேறிச் செல்லும் இறைவ போற்றி
ஓம் ஏனக் குருளைக்கு அருளினை போற்றி 300

திருச்சிற்றம்பலம்


Thursday, April 25, 2013

தமிழில் லிங்காஷ்டகம்



முதற்கண் நன்றி: https://www.facebook.com/photo.php?fbid=10151179173538835&set=a.221830188834.175527.215351143834&type=1


நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.

சிவபரத்துவம் - 1





ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; 
மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை;
ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று ஞான சூரியனாய் விளங்கும் கடவுள் அச்சிவ பெருமானே.

சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை;
அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; 
அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. 
அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.

பொன்போலும் மேனியையுடைய, யானைத் தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! 
ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், "முன்னோர், பின்னோர்" என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; 

அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, "அப்பா" என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; 
(உம்மையால்) "அம்மே" என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.

நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், 
தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; 
அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; 
ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. 

உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.

என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெருமான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். "நந்தி" என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.

எங்கள் சிவபெருமானது பெருமையை நோக்குமிடத்து அவனோடொத்த பெருங்கடவுள் சேய்மையிலும் இல்லை; 

அண்மையிலும் இல்லை என்பது புலப்படும். உழவும், உழவின் பயனும், அவற்றிற்கு முதலாயுள்ள மழையும், அம் மழையைத் தருகின்ற மேகமும் ஆகிய எல்லாம், "நந்தி" என்னும் பெயருடைய அவனேயன்றிப் பிறர் இல்லை.

சிவபெருமான் என்றும் ஒரு பெற்றியனாய் அழிவின்றி இருக்கவும், அளவற்ற தேவர்கள் அழிந்தனர் என்று புராணங்கள் முழங்கவும், மண்ணிலும், விண்ணிலும் உள்ள பலர் அப்பெருமானை, "இவனே முதல்வன்" எனத் துணியமாட்டாத வராகின்றனர்.

திருமால், பிரமன் முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை ஓர்ந்து தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யார்? ஒருவரும் இல்லை. 
அவன் எவ்விடத்தையும் உள்அடக்கி அவை அனைத்தையும் கடந்து நிற்கின்றான்.

"சிவபெருமானது பெருநிலை (வியாபகம்) ஒருவராலும் அளத்தற்கரிது" என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணமாட்டாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.
பிரமனும், திருமாலும் ஓரோர் எல்லையளவில் பெருநிலை (வியாபகம்) உடையவராயினும், அனைவரினும் மேம்பட்ட பெருநிலையுடையவன் சிவபெருமான். 

அவன் அத்தகையனாய்ப் புறத்து நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.

அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்.
திருத்தி விளங்கிய, கொன்றை மாலையணிந்த குழல்போலும் சடையை உடைய, அழகு விளங்கும் மங்கையைப் பாதியில் உடைய சிவபெருமானை மும்மூர்த்திகளும், தேவர்களும் எதனை விரும்பிக் குற்றத்தையே குணமாகக் கொண்டாடி வணங்கு கின்றார்கள்?

"காயம், கத்தூரி" என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து வியப்புண்டாகுமாறு கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு ஏனைத் தேவரது அருள் ஈடாகாது; 
சிவனருளே மேம்பட்டு விளங்கும்.

அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, 
"இதுதான் உனது நகர்; 
இதனை நீ நன்கு புரந்து, 
செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்" என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.

சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய "பொழில்" என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்று வித்தவன்; 
அவ்வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.

உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடி போலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; 

அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.

கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் "சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை" என்று நொந்து கொள்கின்றார்கள்.

உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.
உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, "தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க" என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, "இல்லை" எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; 

அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்து வருகின்றான்.

"நமது மனமே நம்மை நன்னெறியினின்று மாற்றி விட்டது" என்பதை உணர்ந்து, மயக்கம் பொருந்திய அம்மனத்தை மாற்றித் தெளிந்தவரது வழியிற்றான் சிவபெருமான் மறைவின்றி விளங்கி நிற்கின்றான். அதனால், உலகீர், அவனது திருவடி நிழலில் செல்வதற்குப் பன்முறை வணக்கம் கூறியும், பலவாற்றால் புகழ்ந்து பாடியும் அவனது திருவடிகளை என்றும் தெளிந்து நின்மின்கள்.

"இறைவனே! நீ முன்முன் தோன்றினால் உன்னைத் தழுவிக்கொள்ளுதற்கு நான் சிறிதும் நாணமாட்டேன்; எனக்கு உன்னையன்றி உறவாவார் யாருளர்! யான் காணும்படி வெளி நின்றருள்" என்று மாறுபாடின்றி இரக்கின்ற பண்புடைய அடியவர் உள்ளத்திலே சிவன் அறையப்பட்ட ஆணிபோல்பவனாய் வீற்றிருக்கின்றான்
சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாத வன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்குங்கள். வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.
யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.
"அந்தி வானம் என்று சொல்லத் தக்க நிறத்தை யுடைய தாமரை (செந்தாமரை) மலர்போலும் ஒளி பொருந்திய முகத்தை உடைய, அழிவில்லாத சிவபெருமானது திருவருள் நமக்கே உரியதாகும்" என்ற உறுதியுடன் அவனை நாள்தோறும் வணங்க உடன்படும் அவரது உள்ளத்துள்ளே அவன் குடிபுகுந்து நிற்கின்றான்.
மாயோனும் சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. படைப்புக் கடவுளாகிய பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை. அவர்கட்குப் பின் இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.
மேகம் போலும் நிறத்தையுடைய திருமால், பிரமன், மற்றைய தேவர் ஆகியோர்க்கும் இழிவான பிறவித் துன்பத்தை நீக்குகின்ற ஒப்பற்றவனும், யானையை உரித்த எங்கள் தலைவனும் ஆகிய சிவபெருமானைத் துதியுங்கள்; அதனால் அவனை அடைதலாகிய அப் பெரும்பேறும் கிடைக்கும்.
"வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம்போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை "வருக" என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ" என்று சிலர் ஐயுறுவர்.

"எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே; (இதில் ஐயமில்லை. அவனைப் பலர் துதித்து அவற்றிற்கு ஈடாகப் பல பயன்களைப் பெற்றனர். ஆயினும்,) நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுதற்பொருட்டே.
மக்கள்முன் தோன்றி அருள்புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும், தேவர்களுள் ஒருவனாய் நிற்றலால் வானுலகத்தில் உள்ளவனைப் போலவும், முத்தர்களுக்கு வீட்டுலகத்தில் நின்று அருள்புரிதலால் வீட்டுலகத்தில் உள்ளவன் போலவும், யாவரையும் தன்மயமாகச் செய்தலால் இரத குளிகை போல்பவன் போலவும் தோன்றுபவனாய், பண்களில் பொருந்திய இசையிடத்துள்ள விருப்பத்தால் தானே வீணையை இசைக்கின்ற சிவபிரான் பொருட்டு அவனது அருள் நோக்கில் நின்றே அவனிடத்து நான் அன்புசெய்கின்றேன்.
சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.
பண்டுதொட்டு இவ்வுலகத்தில் "கடவுள்" என்ற ஒன்று, பலவாகக் கொள்ளப்படுகின்றது. 

அவற்றின் கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் மெய்ம்மையைச் சிறிதும் உணர்கின்றார்களில்லை. அக்கடவுளரைத் துதிக்கின்ற பல தோத்திரப் பாடல்களைத் தாங்களே ஆக்க வல்லவர்களும் மெய்யறிவில்லாதவர் களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்.

சந்தனத்தில் நின்று கமழ்கின்ற கத்தூரி மானின் மதமணம்போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதித்துக் கிடக்கின்றேன்.

விருப்பம் :)