
“இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சதனை – நீ
இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை?
(இசைத்)
வசை வருமே பாண்டி நாட்டினிலே – குழலி
மணவாளனே உனது வீட்டினிலே – வெற்றி..
ஒருவனுக்கோ?…மதுரைத் தமிழனுக்கோ?…
மணவாளனே உனது வீட்டினிலே – வெற்றி..
ஒருவனுக்கோ?…மதுரைத் தமிழனுக்கோ?…
(இசைத்)
சிவலிங்கம் சாட்சி சொன்ன
கதையும் பொய்யோ? – மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?…
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
கதையும் பொய்யோ? – மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?…
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
(இசைத்)
தாய்க்கொரு பழிநேர்ந்தால்
மகற்கில்லையோ? – அன்னைத்
தமிழுக்கும் பழிநேர்ந்தால் உனக்கில்லையோ?
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா – உன்
ஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கனறி எனக்கில்லை!”
மகற்கில்லையோ? – அன்னைத்
தமிழுக்கும் பழிநேர்ந்தால் உனக்கில்லையோ?
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா – உன்
ஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கனறி எனக்கில்லை!”
(இசைத்)
படம் – திருவிளையாடல் – வருடம் 1965
நன்றி: rammalar.wordpress.com
No comments:
Post a Comment
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)